திருப்பூரில் பெரியார் கைத்தடி ஊர்வலம்

'எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி' கண்டன தலையங்கம்பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சியை வீரமணி முடக்குவது - பெரியாருக்கே எதிரானது

(சமூக பொருளாதார ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வரும் - இந்தியாவின் தலைசிறந்த ஆங்கில ஆய்வு வார ஏடு - 'எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி' ஆகும். நாட்டின் தலைசிறந்த அறிஞர்கள், ஆய்வாளர்களை வாசகர்களாகக் கொண்டிருக்கும் அந்த ஏடு பெரியார் நூல்கள் தேசவுடைமை யாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி யுள்ளது. திராவிடர் இயக் கத்தின் சீரிய ஆய்வாளரும், சர்வதேச நாடுகளில் திராவிடர் இயக்க ஆய்வாளர்களில் முதன்மையானவராகக் கருதப்படு பவருமான முனைவர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் எழுதிய கட்டுரையை அந்த வார ஏடு தலையங்கமாகவே வெளி யிட்டிருக்கிறது. அதன் தமிழாக்கம், இங்கே தரப்படுகிறது)

பெரியாருடைய எழுத்தும் பேச்சும் அறிவுசார் சொத்துடைமை என்றும், அவை தனது தலைமையின் கீழ் உள்ள பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறு வனத்துக்கு மட்டுமே சொந்தமானது என்றும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி, அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் உரிமை கோரியுள்ளார். பெரியார் எழுத்து - பேச்சுகளை வேறு எவராவது வெளி யிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந் தார். வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், தமிழ்நாட்டில் வெகு மக்களின் பொதுப் புத்தியில் மிகப் பெரும் மாற்றங்களை உருவாக்கிய பெரியாரின் அரை நூற்றாண்டு கால சிந்தனைகளையும் அதை பரப்பிட பெரியார் மேற்கொண்ட கடினமான உழைப்பையும், தமக்கே உரித்தானது என்று 'ஏகபோக' உரிமை கோருகிறார் கி.வீரமணி.
தமிழ்நாட்டில் நீண்ட காலமாக ஒரு மரபு உண்டு. பெரியாருடைய கருத்து களை ஏற்றுக் கொண்ட பல வெளி யீட்டாளர்கள். பெரியார் நூல்களை எந்தத் தடையுமின்றி, வெளியிட்டு பரப்பி வந்திருக்கிறார்கள். இத்தகைய முயற்சிகள்தான் பெரியாரின் எழுத்தும், பேச்சும், நிலையாக தொடர்ந்து தமிழக மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தின. அப்படி பெரியார் நூல்களை வெளி யிட்டவர்களில் பெரும்பா லோர் பெரும் வசதி படைத்தவர்கள் அல்ல. அவர்களே தங்களிடமுள்ள மிகக் குறைந்த நிதி வாய்ப்புகளைக் கொண்டு வெளியிட்ட சிறு வெளியீட் டாளர்கள் தான். அவர்களின் அரசியல் ஈடுபாடு தந்த உந்துதல் காரணமாகவே இந்த வெளியீடுகளைக் கொண்டு வந்தார்கள். அதே நேரத்தில், கடந்த காலங்களில் பெரியார் சிந்தனைகளை தொகுக்கும் பெரிய முயற்சிகளும் நடந்துள்ளன. திருச்சி சிந்தனையாளர் கழகம் 1974 ம் ஆண்டில் வே. ஆனைமுத்து அவர்களை பதிப்பாசிரியராக கொண்டு பெரியார் சிந்தனைகள் - 3 தொகுதிகளை வெளி யிட்டது. அந்த தொகுதிகள் தான். பெரியாரின் சமூகம் மற்றும் அரசியல் குறித்த - பல்வேறு தமிழ் ஆங்கில ஆய்வுகள் உருவாகக் காரணமாக இருந்தன. இந்த 3 தொகுதிகளையும் சுதந்திரமாக பயன்படுத்தி எத்தனையோ ஆய்வுகள் வெளிவந்து விட்டன. அப்போதெல்லாம், இதை எதிர்த்து எவரும் கேள்வி கேட்டதில்லை.
தமிழ்நாட்டில் வாசிப்பாளர் களிடையே பெரியார் நூல்களுக்கான தேவை அதிகமாக இருந்தும்கூட, திராவிடர் கழகமோ அல்லது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனமோ, இந்தத் தேவைகளை நிறைவேற்ற - பெரிய முயற்சிகள் ஏதும் எடுக்க வில்லை. இத்தனைக்கும் திராவிடர் கழகத்திடம் ஏராளமான சொத்துகளும் பொருள் வசதியும் உண்டு. அவர்களுக்கு நிதிப் பற்றாக்குறை என்ற பிரச்சினை ஏதுமில்லை. 1983 ஆம் ஆண்டிலேயே திராவிடர் கழக செயல்பாட்டாளர்கள் கடுமையாக உழைத்து, பெரியாரின் எழுத்து பேச்சுகளை தொகுத்து கைப்பட எழுதி, கி.வீரமணியிடம் கையளித்தார்கள். அப்படி தரப்பட்டு, கால் நூற்றாண்டு காலம் ஓடிவிட்டது. 'குடிஅரசு' 1925 ஆம் ஆண்டு பெரியாரால் தொடங்கி நடத்தப்பட்ட வார ஏடு ஆகும். 'குடிஅரசு' தொகுப்பு களோடு 1928 இல் பெரியார் நடத்திய ஆங்கில ஏடான 'ரிவோல்ட்'டிலிருந்து முக்கிய கட்டுரை களைத் தொகுத்து 800 பக்கம் கொண்ட நூலை வெளியிடு வதாகவும் பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருந்தது. திராவிடர் கழகத்தைப் போல் பெரியார் திராவிடர் கழகம் பொருள் வசதி கொண்ட அமைப்பு அல்ல. ஆனாலும் கூட, பெரியாரின் எழுத்து-பேச்சுகளை மக்களின் கரங்களில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காக இந்தப் பெரிய திட்டத்தை அந்த அமைப்பு தேர்வு செய்தது. தமிழ்நாட்டின் வாசகர் களிடையே இந்த திட்டம், மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி யுள்ளது. தாங்களாகவே முன் வந்து நன்கொடைகளை வழங்குகிறார்கள். முன் பதிவுத் திட்டத்தின் கீழ் - இதற்காக நிதி திரட்டப்படுகிறது.
இந்த நிலையில், பெரியார் எழுத்து களை ஏகபோகமாக்கிக் கொண்டு, மக்கள் மன்றத்துக்கு சென்று அடை யாது தடுத்து நிறுத்தும் வீரமணியின் முயற்சிகள், பெரியார் கொள்கை களுக்கே நேர்எதிரான தாகும். திராவிடர் கழகத்தின் அடிப்படையான வேலைத் திட்டமே, பகுத்தறிவு கொள்கைகளை மக்களிடம் பரப்புவதுதான் என்று பெரியார் கருதினார். நூல்கள் வெளியிடு வதில், பெரியார் எப்போதும் லாபக் கணக்குப் பார்த்ததில்லை. தனது சகாவும், சைவருமான ஈ.எம்.சுப்ர மணிய பிள்ளைக்கு பெரியார் 1947 இல் எழுதிய கடிதத்தில், "நான் மிகவும் குறைந்த விலையிலேயே நூல்களை வெளியிடுகிறேன். இதில் வர்த்தக நோக்கம் இல்லை. பெரும்பாலான நூல்கள், இலவசமாகவே வழங்கப்படு கின்றன. எனவே, வர்த்தக எல்லைக்குள் நின்று இந்த வேலையை செய்வது மிகக் கடினம்" என்று எழுதினார். பெரி யாரைப் பொறுத்தவரை எல்லாவற் றையும்விட, பகுத்தறிவு கருத்துகள் பரவ வேண்டும் என்பதே மிகவும் முக்கிய மானது. பெரியாரின் அந்த பகுத்தறிவுக் கருத்துகள் தாராளமாக பரவுதலை, முடக்கிப் போடும் முயற்சிகளில் தான் வீரமணி, இறங்கியுள்ளார். ஆளும் கட்சியான தி.மு.கழகம், இதில் வீரமணியை ஆதரிப்பதுதான், வருத்தத்துக்கு உரியதாகும்.
தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான 'முரசொலி' வீரமணியின் அறிக்கைக்கு முக்கியத்து வம் தந்து வெளியிட்டுள்ளது. இதன் நோக்கம் பெரியார் திராவிடர் கழகம் வெளியிடும் 'குடிஅரசு' தொகுப்புகளை தி.மு.க. தொண்டர்கள் வாங்கி விடாமல், ஒதுங்கிக் கொள்ளச் செய்வதுதான். வீரமணி, அ.இ.அ.தி.மு.க.வுடன் நெருக்கமாக இருந்துவிட்டு, இப்போது, தி.மு.க.வின் அரவணைப்புக்கு வந்துள் ளார். எனவே புதிதாக கிடைத்துள்ள நண்பரை, கைவிட வேண்டாம் என்று தி.மு.க. கருதுகிறது போலும். தான் ஒரு 'பெரியாரிஸ்ட்' என்றும், 'பகுத்தறிவுவாதி' என்றும், அவ்வப் போது வாய்ப்பு கிடைக்கும் போதெல் லாம் தமிழக முதல்வர் மு. கருணாநிதி கூறி வருகிறார். அது உண்மையானால், உடனடியாக பெரியார் நூல்களை அவர் நாட்டுடைமையாக்க வேண்டும். அதன் பிறகு எவர்வேண்டுமானாலும் பெரியார் நூல்களை வெளியிடலாம். ஏற்கனவே, புதுமைப் பித்தன், கல்கி போன்ற எழுத்தாளர்களின் படைப்பு கள் நாட்டுடைமையாக்கப்பட்டதால், பதிப்புத்துறை ஜனநாயகப்படுத்தப் பட்டு, சிலர் மட்டுமே 'லாபம்' குவித்து வந்த ஏகபோகம் தகர்க்கப்பட்டிருக் கிறது.
இந்த நிலையில், இந்துக்கள் உரிமை என்ற பெயரால் தமிழ்நாட்டில் மதவாத அமைப்புகள் காலூன்ற இடம் தேடும் சூழ்நிலையில் பெரி யாரியல் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.
திருப்பூரில் பெரியார் கைத்தடி ஊர்வலம்
திருப்பூரில் பெரியார், அண்ணா சிலைகளை அகற்றக் கோரி இந்து மக்கள் கட்சி போராட்டம் அறிவித்த அக்.5 ஆம் தேதியன்று பெரியார் கைத் தடியுடன் திருப்பூர் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், மதவெறி சக்திகளை எதிர்கொள்ள ஊர்வலமாகப் புறப் பட்டனர்.
காவல்துறை, கழகத் தோழர்கள் 90 பேரை கைது செய்து, திருமண மண்ட பத்தில் வைத்தது. கழக செயற்குழு உறுப்பினர் அங்ககுமார் தலைமை யில் மாவட்ட தலைவர் துரைசாமி முன்னிலையில் போராட்டம் நடந்தது. திருமண மண்டபத்தில் வைக்கப்பட் டிருந்த தோழர்களை பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் சந்தித்துப் பேசினார்.
திருப்பூர் மாநகராட்சி மேயர் செல்வராசு திருமண மண்டபம் வந்து தோழர்களைப் பாராட்டிப் பேசி னார். பா.ம.க. பொறுப்பாளர்களும் தோழர் களை நேரில் சந்தித்து பாராட்டினர்.ஒரே நாளில் 90 தோழர்களை திரட்டி, எதிர் போராட்டம் நடத்திய கழகத்தை முற்போக்கு அமைப்பினர் பலரும் பாராட்டினர்.

பெரியார் விமர்சித்த போராட்டத்தை ஆதரித்த, கி.வீரமணி!


இந்திய அரசே - சிங்களருக்கு வழங்கிய படைக் கருவிகளைதிருப்பிப் பெறு!
இந்திய அரசு - சிங்களருக்கு வழங்கிய ஆயுதத்தைத் திரும்பப் பெறக் கோரும் ஆர்ப்பாட்டங்கள் - பல்வேறு நகரங்களில் அக்.13 அன்று நடந்தன. ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகள் பலவும் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம் பங்கேற்றது.

13.10.2008 திங்கள் மாலை 4.30 மணியளவில் சென்னை மெமோரியல் அரங்கம் அருகில், "சிங்களன் பங்காளி; தமிழன் பகையாளியா?" என்ற முழக்கத் தோடு இந்திய அரசைக் கண்டித்து த.தே.பொ.க. பொதுச்செயலாளர் பெ. மணியரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் சி.மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக துணைப் பொதுச் செயலாளர்), கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு, புலவர் புலமைப்பித்தன், இயக்குனர் சீமான், வழக்கறிஞர் அஜீதா, ஓவியா, கவிஞர் இன்குலாப், ஓவியர் புகழேந்தி, தமிழ்ப் படைப் பாளிகள் முன்னணி ஜெயப்பிரகாசம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அனைத்து அமைப்புகளை யும் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். 6.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் முடிவுற்றது.

தமிழர்கள் படுகொலையை சித்தரிக்கும் வகையில் கழகத்தினர் காயக்கட்டுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கும், ஈழ விடுதலைப் போராட்டத்துக்கும் மக்களின் பேராதரவு இருக்கிறது என்று 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு வெளியிட்ட கருத்துக் கணிப்பை துண்டுப் பிரசுரமாக அச்சிட்டு, கழக சார்பில் அனைவருக்கும் வழங்கப் பட்டது.

சேலம்
ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்யும் சிங்கள அரசுக்கு இராணுவ உதவி செய்யும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 13.10.2008 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் சேலம் தீயணைப்பு நிலையம் அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு கழகத் தலைவர் தா.செ. மணி தலைமையேற்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆ.ஜீவானந்தம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈழத் தமிழரின் விடுதலைப் புலிகளைப் பற்றி தம் கட்சி ஆதரவான கருத்தை வெளிப்படுத்தி பேசினார். ஊர்வலத்தில் பெரியாரின் பிஞ்சுகள் தலையிலும், கைகளிலும் காயக்கட்டுகளுடனும், தோழர்கள் வயிற்றைக் கிழித்து குடல் வெளியே தெரிவது போலவும், கன்னத்திலே காயமடைந்தது போலவும் ஈழத் தமிழர்கள் இலங்கை இராணுவத் தினரால் சித்ரவதை செய்யப்படுவதை வெளிப்படுத்து கின்ற வகையிலே ஒப்பனை செய்து ஊர்வலத்தில் வந்தனர். ஊர்வலம் மதியம் 12.30 மணிக்கு மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு வந்தது. அப்பொழுது கழகத்தலைவர் கொளத்தூர் மணி தலைமை உரையாற்றினார்.

தலைவரின் உரைக்குப் பின்னால், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தை சார்ந்த தமிழ் தேசியன் கண்டன உரையாற்றினார். தமிழக இளைஞர் இயக்கத்தின் இளமாறன், தமிழர் தேசிய இயக்கம் வ. தம்பி, பழனிச்சாமி, ஸ்பீடோ அமைப்பு சார்ப் அ.முரளி, மனித உரிமை பாதுகாப்பு மைத்தின் வழக்குரைஞர் மாயன், குடியுரிமை பாது காப்பு நடுவத்தைச் சார்ந்த தமயந்தி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் வை.செல்வக் குமார், தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சியின் ச.பிந்துசாரன் ஆகி யோர் மத்திய அரசைக் கண்டித்து கண்டன உரையாற்றினர். ஊர் வலத்தில் அனைத்து அமைப்பின் சார்பிலும் 400-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப் பாட்டத்தை சேலம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய் திருந்தது.

கோவை
கோவையில் 13.10.2008 திங்கள் மாலை 4 மணியளவில் செஞ்சிலுவைச் சங்கம் அருகில், இந்திய அரசு சிங்கள இராணுவத் திற்கு அளித்த ஆயுதங் களைத் திரும்பப் பெறக் கோரி கழகம் சார்பில் ஒத்த கருத் துடைய அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைத்து ஈழத்தில் போரில் காயம்படுகின்ற தமிழர்களின் நிலையை உணர்த்தும் வகையில் காயக்கட்டுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நகர செயலாளர் அனுபவ் ரவி, ஆதித் தமிழர் பேரவையின் மாணவரணி செயலாளர் வெண்மணி, ஆதித் தமிழர் விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் மாநகர செயலாளர் தென்னரசு, பு.இ.மு. தமிழரசன், த.தே.பொ.க. பா. தமிழரசன், கழக செயற்குழு உறுப்பினர் வெ.ஆறுச் சாமி, பு.ஜ.தொ.மு. விளவை இராமசாமி, த.ஒ.வி. அறிவுடை நம்பி, த.தே.வி.இ.தேவேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கண்டன உரையைப் பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்ளுக்கு ஈழத்தில் போரில் காயம்பட்டு கிடக்கின்ற தமிழர் களின் நிலையை உணர்த்துவதுபோல தோழர்களுக்கு காயக்கட்டுகள் போடப்பட்டு இருந்தன. பத்திரிகை யாளர்களும், பொது மக்களும் ஆர்வத்துடன் காயம்பட்ட தோழர்களை வந்து பார்த்துச் சென்றனர். மேலும் அவர்கள் தோழர்களின் காயக்கட்டுகளை உண்மைக் காயங்கள் என்று நம்புகின்ற வகையில் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டு இருந்தன. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டக் கோரிக்கைகள்

• சிங்கள அரசுக்குக் கொடுத்த படைக் கருவிகள் அனைத்தையும் திரும்பப் பெறு!
• சிங்களப் படைக்குத் துணையாக அனுப்பிய இந்தியப் படைத் துறையினர் அனைவரையும் திரும்ப அழை!
• இந்தியாவில் எவ்விடத்திலும் சிங்களப் படையினருக்கும் காவல்துறையினருக் கும் பயிற்சி கொடுக்காதே!
• நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ சிங்கள அரசுக்கு அரசியல், பொருளியல், படை வகை உதவி எதுவும் செய்யாதே!

'இராம லீலா'வுக்கு எதிராக 'இராவண லீலா'

ஆரியர் - திராவிடர் போராட்டத்தை சித்தரிப்பதே இராமாயணம் என்பது ஜவகர்லால் நேரு உட்பட பல ஆய்வாளர்களின் கருத்து. பெரியார் இந்தக் கருத்தை நாடு முழுதும் பரப்பினார். திராவிடர்களை வீழ்த்துவதற்கு ஆரியர்கள் பின்பற்ற வேண்டிய 'சூழ்ச்சி - சூது' முறைகளை - இராமன் என்ற கதாபாத்திரம் வழியாக ராமாயணம் விளக்குகிறது. 'சக்கரவர்த்தி திருமகன்' என்று இராமாயணத்துக்கு விரிவுரை எழுதிய ராஜ கோபாலாச்சாரி பார்ப்பனர்களுக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் 'இராமாயணத்தைப் படியுங்கள்' என்று அறிவுரை கூறினார். இராவணன் கற்பனைப் பாத்திரம் என்றாலும், அவர் திராவிட இனத்தின் குறியீடாக உயர்ந்து நிற்கிறான். அத்தகைய இராவணனையும், அவனது குடும்ப உறுப்பினர்களான மேகநாதன், இந்திரஜித் ஆகியோரையும் உருவ பொம்மைகளாக செய்து, இந்த திராவிட மாவீரர்களை நெருப்பில் போட்டுக் கொளுத்தும் 'இராமலீலா'வை டெல்லியில் ஆண்டுதோறும் உற்சாகமாகக் கொண்டாடி தென்னாட்டு மக்களை, திராவிடர்களை பார்ப்பனர்கள் அவமதித்து வருகிறார்கள்.

திராவிட மாவீரன் இராவணனை 'தீமையின் சின்னமாக' இழிவுபடுத்தும் இந்த ஆரியக் கூத்தில், கடந்த 'விஜயதசமி' நாளன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங், குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் பங்கேற்றுள்ளது, தென்னாட்டு மக்களை - திராவிடர்களை இழிவுபடுத்தும் மாபெரும் அவமதிப்பாகும். கடந்த சில ஆண்டுகளாகவே சோனியாவும், அவரது பரிவாரங்களும், இந்த ஆரியக் கூத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.

"டெல்லியிலே நடக்கும் ராமலீலாக்களை எதிர்த்து தென்னாட்டிலும், ராமனை எரிக்கும் ராவண லீலாக்கள் நடத்தும் காலம் வந்தே தீரும்" என்று அன்று கலைஞர், தனது 'முரசொலி' நாளேட்டில் 1954 ஆம் ஆண்டில் எச்சரித்தார்! (8.10.1954) பெரியார் மறைந்த - முதலாண்டு நினைவு நாளில் மணியம்மையார், திராவிடர் கழகத் தலைவராக பொறுப்பேற்ற நிலையில், பெரியார் திடலில் 'இராமலீலா'வுக்கு பதிலடி தரும் வகையில், 'இராமன்' உருவ பொம்மைகளை தீயிட்டு பொசுக்கும் இராவணலீலாவை நடத்தினார். அவருக்குப் பிறகு கி.வீரமணி தலைமை ஏற்ற பிறகு, 'இராவண லீலா' நடத்தப் போகும் அறிவிப்புகள் வந்தனவே தவிர, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் கூறி, பின் வாங்கிக் கொண்டார்கள்.

1996 ஆம் ஆண்டில் பெரியார் திராவிடர் கழகம் தோற்றம் கொண்ட பிறகுதான் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அரசின் தடைகளை மீறி 'இராமன்' உருவ பொம்மைகளை எரித்து, 'இராமலீலாவுக்கு' பதிலடி தரப்பட்டது. அதற்காக தோழர்கள் கைது செய்யப்பட்டு, வழக்குகளை சந்தித்தனர். அண்மையில், ஜார்க்கண்ட் மாநில பழங்குடி மக்கள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிபுசோரன், இராவணனை இழிவுபடுத்தும் நிகழ்வில் பங்கேற்க முடியாது என்று மறுத்துவிட்டார். இப்போதும் பல பழங்குடியினர், 'இராவணனை' தங்கள் மூதாதையராகக் கருதி வழிபட்டு வரும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். மத்திய பிரதேச மாநிலத்தில் விதிசா மாவட்டத்தில் ஒரு கிராமத்தின் பெயரே 'ராவண கிராம்' என்பதாகும். இக் கிராமத்தில் வாழும் 1100 மக்களும், இராவணனை தங்கள் மூதாதையர் என்று கூறி வழிபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகையின் போது இராவணன் சிலை முன் கூடி, வழிபாடு நடத்துகிறார்கள். அதேபோல் போபாலிலிருந்து 600 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மண்டாசூர் எனும் கிராம மக்கள் - ராவணனின் மனைவியான மண்டோதரி பிறந்தது தங்களது கிராமத்தில்தான் என்று நம்பி, இராவணனை தங்கள் கிராமத்தில் மருமகனாகக் கருதி, இராவணனைப் போற்றுகிறார்கள். இவற்றிற்கு வரலாற்று ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றாலும், 'ராமனை' பார்ப்பனர்கள் உயர்த்திப் பிடிப்பது போல் - 'இராவணனை' போற்றும் நம்பிக்கையும் நாட்டில் நிலவுகிறது. இந்த உணர்வுகளை கிஞ்சித்தும் மதியாமல், 'இராவணனை' தீமையின் உருவமாக்கி, தீயிட்டுப் பொசுக்குவது என்ன நியாயம் என்பதே நமது கேள்வி?

இப்படி தென்னிலங்கை வேந்தன் 'இராவணனை' தீயிடும் ஆரியக் கூத்தில் பங்கெடுக்கும் மன்மோகன் சிங் ஆட்சி தான், ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்களர்களுக்கு ஆயுதங்க ளையும், ராணுவப் பயிற்சிகளையும் அளித்து வருகிறது.

இராவணன் - திராவிட மாவீரன் என்ற கருத்தை முன் வைத்து, தமிழ் ஈழத்தில் 'விடுதலை புலிகள்' நடத்தும் 'புலிகளின் குரல்' வானொலி 'இலங்கை மண்' எனும் தொடர் நாடகத்தை 53 வாரங்கள் ஒலி பரப்பியது. அந்நாடகத்தை விடுதலைப்புலிகள் நூலாகவும் வெளியிட்டுள்ளனர். அந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய தமிழ் ஈழ மக்களின் தேசிய தலைவர் பிரபாகரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

"போர் விதிமுறைகளுக்கு மாறாக, மிகவும் கபடமான வழியில் தமிழ்மன்னனான இராவணனைக் கொன்றுவிட்டு, உண்மைக்குப் புறம்பான முற்றிலும் பொய்யான ஒரு வரலாறு எழுதப்பட்டது. மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்ட இந்த வரலாற்றுத் திரிபில் தமிழரின் பண்டைய வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டது. தலைகீழாகத் திரித்து விடப்பட்ட இந்த வரலாற்றின் தாக்கம் இருபத்தோராம் நூற்றாண்டிலும் முடிவுறவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இராவணனுக்கு தீ வைத்து மகிழ்ச்சிக் கூத்தாடும் ஆரியர்களும், அவர்களது வலையில் சிக்கிக் கிடப்போரும், இராவணனை அழித்த முறையைப் போலவே தமிழ் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கை ஒளி பிரபாகரனையும் அழித்திட 'சூழ்ச்சி வலை' விரிக்கிறார்கள். எம்.கே.நாராயணன்களும், சிவசங்கரமேனன்களும், 'இந்து' ராம்களும், 'துக்ளக்' சோக்களும், சுப்ரமணிய சாமிகளும், உளவு நிறுவனங்களும் மரத்தின் பின்னால் பதுங்கி 'விபிஷணர்களைப் பிடி; அவர்களை அமைச்சராக்கு; இதோ ரகசிய ஆயுதங்களைப் பிடி; வெளியில் சொல்லாதே' என்று 'ராமாயணம்' காட்டிய வழியில் இராவணனை வீழ்த்தும் படலத்துக்கு திட்டங்களைத் தயாரிக்கிறார்கள்.

தாய்த் தமிழ்நாட்டின் குடிமக்களை 'பயங்கரவாதம்', 'தீவிரவாதம்', 'ஆயுதக் கலாச்சாரம்' என்ற சொல்லாடல்களுக்குள் சிக்க வைத்து, மூளைச் சலவை செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால், இது 'இராமாயணயுகம்' அல்ல. 'இராவணயுகம்' என்பதை எதிரிகளுக்கு நாம் உணர்த்த வேண்டும்.

இனி வரும் காலத்தில் இராமலீலாவுக்கு பதிலடியாக 'இராவண லீலா'வுக்கு தயாராக வேண்டிய நிலையை பார்ப்பனர்களே உருவாக்கி வருகிறார்கள். இராவணன் வாழ்க என்ற முழக்கத்தோடு மாவீரன் பிரபாகரன் வாழ்க என்று சேர்த்து முழக்குவோம்! இராமனுக்கு எதிராக தீ மூட்டுவோம்; அதில் இந்திய தேசிய பார்ப்பன வர்க்கத்தையும், துரோகத்தையும் சேர்த்துப் பொசுக்குவோம்!

கோவையில் 'இந்து' ஏட்டுக்கு தீ


ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் கிளர்ந்தெழுவதை தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பன 'இந்து' ஏடு அக்.14 அன்று நஞ்சை கக்கும் தரம் தாழ்ந்த கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்துவின் ஆசிரியர் குழுவைச் சார்ந்த மாலினி பார்த்தசாரதி என்ற பார்ப்பனப் பெண் எழுதியுள்ள அக்கட்டுரையில் விரக்தியடைந்த விடுதலைப் புலிகள் தூண்டுதலால் தான் - தமிழ்நாட்டில், ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் நடக்கின்றன என்றும், இப்படி தூண்டிவிடும் சக்திகள் ஆபத்தானவை என்றும் எழுதியுள்ளார். விடுதலைப்புலிகளும், பிரபாகரனும் சிங்கள ராணுவத்தின் பிடிக்குள் சிக்கி விட்டார்கள் என்றும், அவர்கள் கதை முடியப் போகிற நிலையில், அதைத் தடுக்கும் தமிழக எழுச்சிகள் கண்டிக்கத்தக்கது என்றும், சாக்கடைத்தனமாக பூணூல் திமிரோடு அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தமிழ் உணர் வாளர்களிடம் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள இக் கட்டுரையை எதிர்த்து, கொதித்துப் போன கழக இளைஞர்கள் கோவையில் 'இந்து' பத்திரிகை அலுவலகத்தின் முன் கட்டுரை வந்த அதே நாளில் பகல் 12 மணியளவில் திரண்டு பார்ப்பன ஏட்டுக்கு எதிராக எச்சரிக்கை முழக்கமிட்டனர். மாலினி பார்த்தசாரதியின் 'மலநாற்றம்' வீசும் கட்டுரை வெளியிட்ட 'இந்து' ஏட்டுக்கு தீ வைத்தனர். கழக சட்டக் கல்லூரி மாணவர்களும், கழகத்தினரும் இரண்டு அணியினராக வந்தனர். பார்ப்பன இந்து நிர்வாகம் தோழர்களை தாக்கத் தொடங்கியது. இரு தரப்பிலும் கைகலப்பானது. பின்னர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானோர்: சாஜித், பன்னீர்செல்வம், மணி கண்டன், விசுவம், பிச்சுமணி, பாண்டியன், நேருதாஸ், சத்யா, ரகு, மணிவண்ணன், ரவி.

பெரியார் விமர்சித்த போராட்டத்தை ஆதரித்த, கி.வீரமணி!திரிபுவாத திம்மன்கள் - யார்? (5)

அவ்வப்போது ஆட்சிக்கு வரும் கட்சிகளுக்கு 'ஆலவட்டம் வீசி' அதிகார மய்யத்தின் அரவணைப்பைத் தேடிக் கொண்டிருப்பவர் கி.வீரமணி. இந்த அரவணைப்புக்காக அவர் மேற்கொள்ளும் 'யுக்திகளுக் கும்', அதனடிப்படையில் வெளியிடும் சந்தர்ப்பவாத அறிக்கைகளுக்கும் கொள்கை முலாம் பூசிக் கொள்கிறார்கள்.


ஆச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை ஒழிப்பதற்கும், நாடு முழுதும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே கல்வி வெளிச்சம் பரவுவதற்கும், காமராசர் ஆட்சியை தீவிரமாக ஆதரித்தார் பெரியார். அதற்காக அவர் அதிகார மய்யத்திடம் சரணடைந்துவிடவில்லை. அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை காமராசர் ஆட்சியின் போதுதான் நடத்தினார். தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை காமராசர் ஆட்சியில் தான் அறிவித்தார். அதேபோல், இப்போது நடந்தால் ஆட்சிக்கு தொல்லைதரவே இத்தகைய போராட்டங்களை பெரியார் நடத்துகிறார் என்று, கி.வீரமணி அறிக்கைகளை வெளியிட்டிருப்பார்.
பார்ப்பனர் ஜெயலலிதா ஆட்சிக்கு ஆதரவும், பாராட்டுகளையும் குவித்துக் கொண்டிருந்தபோது, அந்த 'யுக்திக்காக' பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பும், கடவுள் எதிர்ப்பும், அவரது லட்சியமல்ல. ஒரு வழிமுறைதான் என்ற 'வியாக்யானத்தை' வீரமணி முன் மொழிந்ததை கடந்த இதழில் சுட்டிக்காட்டியி ருந்தோம். மற்றொரு கொள்கை புரட்டை இங்கே எழுதுகிறோம்.

1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், பெரியாருக்கு உடன்பாடானது அல்ல. கட்டாய இந்தியைக் கொண்டு வந்த பார்ப்பனர் ராஜகோபாலாச்சாரி, 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் களமிறங்கினார். தி.மு.க.வும் அப்போது ராஜகோபாலாச்சாரியின் சுதந்திரா கட்சியை தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டிருந்தது. பெரியார் இந்தப் போராட்டத்தை பார்ப்பனர் நடத்தும் கலவரம் என்று கூறினார். பெரியாரின் எதிர்ப்புக்கு உள்ளான அந்தப் போராட்டத்தை கி. வீரமணி, பெரியாருக்குப் பிறகு அங்கீகரித்தார். அதற்கான பின்னணியும் 'யுக்தி' தான்! ஜெயலலிதாவை தீவிரமாக ஆதரித்துக் கொண்டிருந்தபோது, பெரியார் திடலில் 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு தியாகிகளுக்கு ஒரு பாராட்டுக் கூட்டத்தை கி.வீரமணி ஏற்பாடு செய்தார். ஜெயலலிதாவின் நெருக்கமான தோழியான சசிகலாவின் கணவரும், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிகாரத்தில் கொடிகட்டிப் பறந்தவருமான நடராசன் - 1965 ம் ஆண்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர். அவருக்கு விருது வழங்கி மகிழ்விக்க, நடராசன் ஆலோசனைப்படி கி.வீரமணி நடத்திய பாராட்டுக் கூட்டமே அது. அந்த 'விருது வழங்கும்' நிகழ்ச்சியின் விளம்பரம் 'தினமணி' நாளேட்டில் வெளியிடப்பட்டது. திராவிடர் கழகத்தின் பெயரால் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சிக்கான விளம்பரத்தில் திராவிடர் கழகக் கொடிக்கு பதிலாக, அ.இ.அ.தி.மு.க. கொடிகளோடு விளம்பரம் வெளி வந்தது. பெரியாரால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு போராட்டத்தை பெரியார் மறைவுக்குப் பிறகு, அதை அங்கீகரித்து போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு விருது வழங்கியது - பெரியாரைத் திரிப்பது அல்லவா? அதிகாரத்தில் உள்ளவர்களை மகிழ்விப்பதற்காக எந்த எல்லைக்கும் போகக் கூடிய - இந்த வீரமணிதான், பெரியார் நூல்களை, மற்றவர்கள் வெளியிட்டால், திரித்து விடுவார்கள் என்கிறார். பெரியார் திராவிடர் கழகத்தை 'திரிபுவாத திம்மன்கள்' என்கிறார்! பெரியாரைத் திரிப்பது யார்? பதில் வருமா?
(புரட்டுகள் உடைப்பு தொடரும்)

விடுதலைப் புலிகளுக்கும் - ஈழ விடுதலைக்கும் தமிழகத்தில் பேராதரவு'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டின் கருத்து கணிப்பு

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் பெரும் பான்மையான மக்கள் தீவிரமாக ஆதரிக்கிறார்கள் என்ற உண்மையை - 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு தமிழகம் முழுதும் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கும், ஈழத் தமிழர் போராட்டத்துக்கும் தமிழ்நாட்டில் ஆதரவு இல்லை என்று பார்ப்பன ஊடகங்கள் செய்து வரும் பிரச்சாரம் பொய் என்பது இதன் மூலம் அம்பலமாகி யுள்ளது. 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு விடுதலைப் புலிகளையோ, ஈழத் தமிழர் போராட்டத்தையோ ஆதரிக்கும் ஏடு அல்ல. ஆனாலும், அந்த ஏடே நடத்திய கருத்துக் கணிப்பு, இந்த உண்மைகளை தெளிவுபடுத்தியுள்ளது. 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு - 'சிஃபோர்' எனும் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை அக்.12, 2008 அன்று முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய ராணுவம் பயிற்சி தந்து, ஆயுதங்கள் வழங்குவதை தமிழ் நாட் டில் கணிசமான மக்கள் விரும்பவில்லை. இதனால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி கட்சி யுடன் தி.மு.க. உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதே - கணிசமான தமிழர்களின் கருத்து.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு, அவர் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டால், இந்திய ராணுவம் உடனடியாக, பிரபாகரனை மீட்க, இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று பெரும்பாலோர் கூறுகிறார்கள்.

விடுதலைப்புலிகள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்றும், ஈழத் தமிழர்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப் புலிகள் தான் என்றும் பெரும்பாலான மக்கள் கூறுகிறார்கள்.
40 சதவீத தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு நிதி உதவியும், பொருள் உதவியும் வழங்க விருப்பமுடன் உள்ளனர்.
சென்னை, கோவை, ஈரோடு, சேலம், மதுரை, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 1031 பேர் பல்வேறு தரப்பிலிருந்து தேர்வு செய்யப்பட்டனர். பேட்டி காணப்பட்டவர்களில் 45 சதவீதம் பேர் பெண்கள். கடந்த அக்டோபர் 6 ஆம் தேதியிலிருந்து 11 ஆம் தேதி வரை இந்த கருத்துக்கணிப்பு நடத்தப் பட்டது என்பதால், இதுவே தற்போதைய தமிழர்களின் உணர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
• தமிழ் ஈழம் அமைய - பணமும் பொருளும் அளிக்கத் தயார் என்று 40 சதவீதம் பேர் கூறு கிறார்கள். தமிழ் ஈழத்தை ஆதரிக்க மாட்டோம் என்று 10 சதவீதம் பேர் மட்டுமே கூறுகிறார்கள். ஈழத் தமிழர்களுக்காக முழு அடைப்பு நடந்தால், அதில் பங்கேற்போம் என்று 10 சதவீதம் பேரும், தமிழ் நாட்டில் அடைக்கலம் தேடி வரும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தருவோம் என்று 22 சதவீதம் பேரும், நியாயமான பிரச்னை தான், ஆனால், தங்களுக்கு இதில் ஆர்வம் இல்லை என்று 14 சதவீதம் பேரும் கூறுகிறார்கள்.
• பிரபாகரனுக்கு ஏதேனும் இலங்கை ராணுவத்தால் ஆபத்து நேருமானால், இந்திய ராணுவத்தை உடன் அனுப்பி பிரபாகரனை பாதுகாக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டில் பெரும் பான்மையோர் கருத்து. இப்படி கருத்து கூறியவர்கள் 31 சதவீதம்.
• அதேபோல், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்பதே பெரும்பான்மை தமிழர்களின் கருத்து. 51 சதவீதத்தினரின் கருத்து இதுவேயாகும். தடையை நீடிக்க வேண்டும் என்போர் 8 சதவீதம் மட்டுமே.
• விடுதலைப்புலிகள் இயக்கம் ஒன்று தான் ஈழத் தமிழர்களின் உண்மையான ஒரே பிரதிநிதி என்பதும், அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. விடுதலைப் போராளிகள் என்பதும் பெரும் பான்மைத் தமிழர்களின் கருத்தாக உள்ளது.
36 சதவீதத்தினர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளனர். பயங்கரவாதிகள் என்று கருத்துடையோர் 12 சதவீதம் மட்டுமே. மற்றவர்களுடன் இணைந்து தமிழர்களுக்காகப் போராடும் அமைப்பு என்று 22 சதவீதம் பேரும், சுதந்திரத்துக்காகப் போராடு வோர் என்று 30 சதவீதம் பேரும் கருத்து கூறி யுள்ளனர்.
• இலங்கைப் பிரச்னையைத் தீர்க்க தமிழக அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள் விக்கு - இலங்கைக்கு ஆயுதமும், ராணுவப் பயிற்சி யும் வழங்கி வரும் மன்மோகன்சிங் ஆட்சியிடம் தி.மு.க. உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதே பெரும்பான்மை தமிழர் களின் கருத்தாக உள்ளது. 34 சதவீதம் பேர் இந்தக் கருத்தை தெரி வித்துள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முழு அடைப்பு நடத்தலாம் என்று 10 சதவீதத் தினரும், சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று 12 சதவீதத்தினரும், ஈழத் தமிழர் பிரச் சினைக்காக சிறப்பு வரி விதித்து, தமிழர்களுக்கு உதவ முன்வந்தால், வரி கட்டத் தயார் என்று 10 சதவீதத்தினரும், பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும் என்று 2 சதவீதத்தினரும் கருத்து கூறியுள்ளனர்.
• ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபாடு காட்டுவதில் போட்டி போட் டுக் கொண்டிருப்பது சரி தானா என்ற கேள்விக்கு அது நியாயமானதே என்று பெரும்பான்மையான 44 சதவீதத்தினர் கருத்து கூறியுள்ளனர்.

சிற்பி ராசனின் மகத்தான சமூகப் புரட்சி!

பெரியார் திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொண்டு, மூடநம்பிக்கைக்கு

எதிராக மக்களிடம் பகுத்தறிவு பரப்புதலை லட்சியமாகக் கொண்டு செயல் பட்டு வரும் தோழர் சிற்பி ராசன் தலை சிறந்த சிற்பிகளில் ஒருவர். அவர் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட 'கடவுள்கள்' தலித் சிற்பிகளால் உருவாக்கப் பட்டவர்கள். சிற்பி ராசனின் இந்த மகத்தான சமூகப் புரட்சியை 'ஆனந்தவிகடன்' ஏடு 8/10/08 படம் பிடித்துக் காட்டியுள்ளது.
"பதினைந்து வருடங்களுக்கு முன்பு இசை ஞானி இளையராஜா எனது சிற்ப மையத்துக்கு வந்திருந்தார். அப்போது நான் செதுக்கிக் கொண்டு இருந்த விநாயகர் சிலையைத் தொட்டுப் பார்க்க லாமா என்று கேட்டார். 'இப்போதுதான் தொட முடியும். கோயில் கருவறைக்குள் சென்றுவிட்டால் பக்தனாகிய உங்களாலும் தொட முடியாது. சிலையைச் செய்த என்னாலும் தொட முடியாது' என்றேன். சிரித்துக் கொண்டார்!" தனது உளியைப் போலவே சிற்பி ராஜனின் வார்த்தைகளிலும் கூர்மை!

இந்தியாவின் மிகச் சிறந்த சிற்பிகளில் ஒருவர் ராஜன். சுவாமிமலை அருகே திம்மக்குடியில் இருக்கும் 'ராஜன் சிற்ப மையத்'தில் ஏதோ ஒரு தாளகதியில் இசை மீட்டு கின்றன நூற்றுக்கணக்கான உளிகள். தாமரைப்பூ சரஸ்வதி, காசுகளை அள்ளி இறைக்கும் லட்சுமி, ரதி, மன்மதன், திருப்பதி வெங்கடாசலபதி, ஆஞ்சநேயர், விநாயகர், வள்ளி தெய்வானையோடு முருகன், ஊழித் தாண்டவமாடும் நடராசர் என பஞ்சலோக மற்றும் வெண்கல வடிவங்களில் மினி தேவலோகச் சூழல்! இந்தியாவின் சார்பாக லண்டன், ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து சிற்பக் கண்காட்சிகளில் கலந்து கொள்ள மத்திய அரசு தேர்ந்தெடுப்பது இவரைத்தான். பிரான்ஸ் நாட்டுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் பாடமாக சிற்பி ராஜனின் வாழ்க்கைக் குறிப்பு இடம் பெற்றிருக் கிறது.

இவற்றைத் தாண்டியும் ராஜனுக்கு இருக்கிறது சில தனிச் சிறப்புகள். சுவாமி சிலைகளைத் தெய்வாம்சமாக வடித்துத் தரும் ராஜன், ஒரு பழுத்த நாத்திகவாதி. பெரியார் கொள்கைகளுக்காகத் தன் வாழ்வை அர்ப் பணித்தவர். இவரது சிற்ப மையத்தின் இன்னொரு சிறப்பு தலித் சிற்பிகள்! தாழ்த்தப் பட்டவர்கள் என ஒதுக்கப்படும் தலித்களால் உருவாக்கப்பட்ட எண்ணி லடங்கா கடவுள் சிலைகள் இந்தியாவைத் தாண்டி உலகெங்கிலும் உள்ள முக்கியக் கோயில்களில் அருள் பாலித்துக் கொண்டிருக் கின்றன. புரொஃபஷனல் கலைக்கூடம், லேப்-டாப் மூலம் வாடிக்கையாளர் களுடன் தகவல் பரி மாற்றம் என சிற்பக் கலையை அடுத்த நூற்றாண் டுக்குக் கை பிடித்து அழைத்துச் செல்கிறார் ராஜன். கலவையான உலோக மணம் நாசியைத் தீண்ட அங்கிருந்த வித்தி யாசமான 'பறை யடிக்கும் விநாயகர்' என்னோடு நின்றிருந்த வின்சென்ட்டின் கேமராவை ஈர்த்தது.

"அனைவருக்கும் பொதுவான கடவுள், தலித் மக்களின் கலா சாரத்தையும் பிரதி பலிக்க வேண்டும் இல்லையா? அதற் காகத்தான் இந்தப் பறையடிக்கும் விநாயகர் சிலை! பதின் மூன்று வயதிலிருந்தே கடவுள் மறுப்பாளனாக இருந்தாலும், எனக்கிருந்த சிற்பக் கலைநயத்தைக் கடவுள் சிலை செய்வதன் மூலம்தான் ஆழமாக வெளிப்படுத்த முடியும் என்று நம்பினேன். வெறும் கல்லை, உலோகத்தை கலைநயம் மிக்க கடவுளர்களாகத் தங்கள் உழைப்பின் மூலம் உரு வாக்கித் தரும் மக்களைக் கோயிலின் உடள்ளேயே விட மறுப்பது மானுட விரோதம் இல்லையா? பெரியார் தொண்டனாக இதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டியிருந்தது.

முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்? மூலவர் சிலைகளையே தலித்துக்களைக் கொண்டு உருவாக்கி கோயில் கருவறைக்குள் வைக்கத் தீர்மானித்தேன். சிற்பக்கலையில் ஆர்வமுள்ள தலித் இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு இலவசமாகத் தங்குமிடம், பயிற்சிகள் அளித்து என் சிற்ப மையத்தைக் குருகுலமாகவே மாற்றினேன். எதிர்பார்த்ததைவிடவும் இந்த முயற்சிக்குக் கடும் எதிர்ப்புகள். 'சாமி சிலையைக் கீழ்ச் சாதியினர் செய்வதா?' என்று கேள்வி எழுப்பி யவர்கள் எல்லாம் அவர்களால் உருவாக்கப்பட்ட கலைநயம் மிக்க கடவுள் சிலைகளைப் பார்த்து அசந்து போனார்கள். ஆரம்ப காலங்களில் கோயில் நிர்வாகிகள் தலித்து களால் உருவாக்கப்பட்ட கடவுள் சிலைகளை வாங்க மறுத்தார்கள். கடைசியில் அவர்களைக் கலை வென் றது. அந்த அளவுக்கு தலித் இளைஞர்களின் சிற்ப நுட்பம் ஒவ்வொரு அங்குலத்திலும் வெளிப்பட்டது.

இந்த நாட்டின் ஆதிக்குடிகள் தலித்துகள். நமக்கான கலையை, நாகரிகத்தை உருவாக்கித் தந்தவர்கள். சாமி சிற்பங்கள் மட்டும் அந்தக் கலை குடிகளின் கரங்களி லிருந்து தப்ப முடியுமா? எனது சிற்ப மையத்தில் அவர்களால் உருவாக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் நியூ ஜெர்ஸி சிவன் கோயில், க்ளீவ்லேண்டிலுள்ள இந்து மிஷன் கோயில்களை அலங்கரிக்கின்றன. இதே சுவாமி மலைக்கு அருகில் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஐயப்பன் சிலையை நானும் எனது மாணவர்களும் தான் உருவாக்கினோம். அதன் பிறகு, அந்த ஐயப்பன் சிலைக்கு வெள்ளிக் கவசம் வேண்டுமென கோயில் நிர்வாகத்தினர் கேட் டனர். கவசத்துக்கு அளவெடுக்க வேண்டுமானால் கருவறைக்குச் செல்ல வேண்டும். ஆனால், கோயில் நிர்வாகம் என்னையும் எனது தலித் மாணவர்களையும் கருவறைக்குள் விடாமல் தடுத்தது. கோபப்பட்டு திரும்பி வந்துவிட்டோம். பிறகு, அவர்களே தேடி வந்து அழைத்ததால் அளவெடுத்துக் கவசம் சாத்தி னோம். அவ்வளவு ஏன்...? காஞ்சி சங்கரமடத்தி லுள்ள காமாட்சி அம்மனின் அவதார மாகிய மகாமேரு சிலையை உருவாக்கியவர்களும் என் தலித் மாணவர்கள்தான்" என்கிற ராஜனும், அவரது மாணவர்களும் இது வரைக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சாமி சிலைகளை உருவாக்கி உள்ளனர்.

சுவாமிமலையில் இயங்கும் சிற்ப மையத்தை அண்மையில் விற்றுவிட்டார் ராஜன். அதை வாங்கிய வர்கள், 'ராஜன் சிற்ப மையம்' என்ற பெயரையே தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள ஒரு பெரும் தொகையை ராயல்டியாக வழங்கியுள்ளனர். இப்போது கும்பகோணம் அருகே ஆலங்குடியில் பரந்து விரிந்த பிரமாண்ட சிற்ப மையத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். "அங்கும் தலித் இளைஞர்களுக்கே முன்னுரிமை" எனும் ராஜன், சிற்பக் கலையின் மீதுள்ள ஈடுபாடு காரணமாகத் திருமணமே செய்து கொள்ள வில்லை.

ராஜனின் சீடரான சிற்பி பாண்டுரங்கன், "ஒளிவு மறைவின்றி சிற்பக் கலையின் ரகசிய நுட்பங்கள் அனைத்தையும் ராஜன் ஐயா தான் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். வருமானம், வெளிநாட்டுக்காரர் களின் பாராட்டுக்கள் பெரிய விஷயமில்லை. உள்ளூ ரிலேயே சாதியின் பெயரைச் சொல்லி எங்களை ஒதுக்கியவர்கள் கூட இன்று மரியாதையோடு பார்க்கிறார்கள்." ஏழரை அடி உயரமும் நானூறு கிலோ எடையும் கொண்ட லட்சுமி சிலையை உயிரோட்டமாகச் செதுக்கியபடியே பேசுகிறார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இறுகி கெட்டிப்பட்டுக் கிடக்கும் சாதி என்னும் கடும்பாறையின் மீது ராஜனின் உளி தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கிறது! ட

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாதது ஏன்?

மதவன்முறை சக்திகள் அதிர்ச்சி

நாடு முழுதும் மதக்கலவரங்களைத் தூண்டி விட்டு வன்முறைகளை நடத்தி வரும் சங்பரிவார்களின் அரசியல் முகமான பா.ஜ.க.வின் மாநில பொதுக் குழு சேலத்தில் கூடியபோது மதவெறியை எதிர்க்கும் மனிதநேய உணர்வாளர்கள் கடும் எதிர்ப்பையும், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். பெரியார் திராவிடர் கழகம், சுற்றுச்சூழல், மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்த 250 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

அண்மைக்காலமாக நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, பா.ஜ.க. சங்பரிவாரங்கள், மதக் கலவரங்களைத் திட்டமிட்டு உருவாக்கி வரு கிறார்கள். மதக் கலவரங்களை உருவாக்கி படுகொலை களை நடத்தி, மத அடிப்படையில் வாக்காளர்களை கூறு போடுவதே இவர்களின் நோக்கம். தமிழ் நாட்டிலும் பெரியார் கருத்துப் பரப்பும் கூட்டங்களில் கலவரம் விளைவித்து, அதற்கு ‘இந்துக்களின் தன்னெழுச்சி’ என்று பார்ப்பனர்கள் இல.கணேசன், ராம.கோபாலன் போன்றோர், அறிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், சங். பரிவார்களின் அரசியல் அமைப்பான பா.ஜ.க. சேலத்தில் மாநில பொதுக் குழுவை கடந்த 27 ஆம் தேதி கூட்டியது. பா.ஜ.க.வின் - அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், இதில் பங்கேற்க வருகை தந்தார். அமைதிப் பூங்காவான தமிழகத்தை, மதவெறிக் களமாக மாற்றிட திட்டமிட்டு வன்முறை களை நடத்தி வரும், பா.ஜ.க.வின் செயற்குழு தமிழ்நாட்டில் சேலத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் நடத்திடக் கூடாது என்று, எதிர்ப்பு தெரிவிக்க, மதச்சார்பற்ற மதவெறிக் கலவரங்களை எதிர்க்கும் அமைப்புகள் முடிவு செய்தன. பெரியார் திராவிடர் கழகம், ‘சேலமே குரல் கொடு’, குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழ் தேசிய இயக்கம், தமிழக இளைஞர் இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் முதல் கட்டமாக சேலத்தில் 23 ஆம் தேதி பத்திரிகை யாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி யில், “சங்பரிவாரின் அரசியல் முகமான பா.ஜ.க.வின் மாநில செயற்குழு சேலத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எந்த இடத்தி லும் நடத்தவிட மாட்டோம்; அமைதிப் பூங்காவான தமிழகத்தை வன்முறைக் களமாக்கிடும், எந்த சிறு நிகழ்வும், தமிழகத்தில் நடக்கக் கூடாது என்று அமைதி விரும்பிகளாகிய நாங்கள் அறிவிக்கிறோம்; பொதுக்குழு நடத்தப்படுமானால் நேரடி நடவடிக்கை யில் இறங்குவோம்” என்று அறிவித்தார்.

அடுத்த நாளே - ‘தமிழ்நாட்டை வன்முறைக் காடாக மாற்ற விரும்பும் பா.ஜ.க.வின் பொதுக் குழுவை அனுமதிக்காதே’ என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஏராளம் ஒட்டப்பட்டன. பத்திரிகை யாளர்கள் சுவரொட்டிகளை படம் பிடித்து, பத்திரிகைகளில் வெளியிடவே, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் செய்தி வேகமாகப் பரவியது. அதிர்ச்சியடைந்த மதவெறி சக்திகள் - கழகத்தின் சுவரொட்டிகள் மீது பா.ஜ.க. பொதுக்குழு சுவரொட்டிகளை ஒட்டியதோடு, கழக சுவரொட்டிகளை கிழிக்கத் தொடங்கினர். கழகத் தோழர்கள் சுவரொட்டி கிழிக்கப்பட்ட பகுதிகளில் புதிதாக சுவரொட்டிகளை அடித்து, ஒட்டி, பதிலடி தந்தனர். சுற்றுச்சூழல்களை நாசப்படுத்தி, மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வரும் ‘கெம்பிளாஸ்ட்’ நிறுவனத்தை எதிர்த்துப் போராடி வரும் ‘கோனூர் விவசாயிகள் சங்கம்’ மக்களின் வாழ்வுரிமையை பறித்து, நிலங்களை பெரும் தொழில் நிறுவனங் களுக்கு ‘தாரை’ வார்ப்பதை எதிர்த்துப் போராடி வரும் ‘கஞ்சமலை பாதுகாப்புக் குழு’வினரும், மனித உரிமைக்கும், சுற்றுச் சூழலுக்கும் எதிராக செயல்படும் மதவெறி சக்திகளை எதிர்த்து இந்தப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டனர்.

இயற்கை வளங்களை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதை எதிர்த்த காரணத்தால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி, மக்களுக்கு சேவை செய்து வந்த மருத்துவர் விநாயக்சென் அவர்களை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. வங்காளியான விநாயக்சென் வேலூர் மருத்துவக் கல்லூரியில் படித்து - சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களிடம் மருத்துவப் பணியாற்றி வந்தவர். மனித உரிமைப் போராளி; மனித உரிமைக் கழகத்தின் அகில இந்திய துணைத் தலைவர்; மருத்துவர் விநாயக்சென்னை கைது செய்த பா.ஜ.க. அரசைக் கண்டித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கத்தோடும், ஒரிசா, கருநாடகம், தமிழ்நாட்டில் நடக்கும் மதவெறி வன்முறைகளைக் கண்டித்தும், பா.ஜ.க. பொதுக் குழு நடக்கும் மண்டபத்தின் முன், கறுப்புக்கொடிகளுடன் திரளுவது என முடிவு செய்யப்பட்டது.

‘மதத்தின் பெயரால் வன்முறைகளை அரங் கேற்றாதே’; ‘மருத்துவர் விநாயக்சென்னை விடுதலை செய்’; ‘அமைதியும் நல்லிணக்கமும் மலரட்டும்’ என்ற வாசகங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப் பட்டு, மார்பிலும், முதுகிலும் தொங்கவிட்டு, தோழர்கள் வந்த காட்சி, பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த மனித உரிமையாளர் பியுஸ் மானஷ் - இவைகளைத் தயாரித்து வழங்கினார்.

சேலம் இரும்பாலை சாலையிலுள்ள ஜகீர் ரெட்டிப்பட்டி எம்.எஸ்.வி. திருமண மண்டபத்தில், பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இரும்பாலை பிரிவு சாலை அருகே திரண்ட தோழர்கள் மண்டபத்தை நோக்கி, மதவெறி சக்திகளுக்கு எதிராக முழக்கமிட்டு, அணிஅணியாகப் புறப்பட்டனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் முதல் அணியில் வந்த 150 கழகத் தோழர்கள் மண்டபத்தை நெருங்கும் முன்பே காவல்துறை தடுத்து கைது செய்தது.

சேலம் மாவட்டக் கழகத் தலைவர் மார்ட்டின் தலைமையில் இரண்டாவது அணியில் 50 தோழர்கள் கறுப்புக் கொடியுடன் புறப்பட்டு, வேறு வழியாக மண்டபத்தை அடைந்து, மண்டப வாயிலின்அருகே கறுப்புக் கொடிகளுடன் முழக்கமிட்டபோது அதிர்ச்சியடைந்த காவல்துறை கழகத்தினரை சுற்றி வளைத்து போலீஸ் வேனில் ஏற்றியது.

மூன்றாவது அணியில் 50 தோழர்கள் மாவட்டக் கழக அமைப்பாளர் பாலன் தலைமையில் மண்டபத்தை நெருங்கி வாயிலிலே கூடியபோது காவல்துறை சுற்றி வளைத்து கைது செய்தது.

கோனூர் விவசாயிகள் சங்கத் தோழர்கள் 25 பேர் மாதேஷ் தலைமையில் - கழுத்தில், கோரிக்கைப் பதாகைகளை மாட்டிக் கொண்டு மண்டபத்தை நோக்கி வந்தபோது கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கஞ்சமலை பாதுகாப்புக் குழுவினர் தோழர் கண்ணன் தலைமையில் வந்தபோது கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 250க்கும் மேற்பட்ட தோழர்கள் திருவாக்கவுண்டனூர் சாலை யிலுள்ள பி.என்.சி.ஜி. திருமணமண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, 30 நிமிட நேரம் கழித்து, சேலம் இளம்பிள்ளையைச் சார்ந்த கழகத் தோழர் மணிமாறன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் போராட்டத்தில் பங்கேற்க வந்தனர். மணிமாறன் கருப்புச்சட்டை அணிந்திருந்தார். மண்டபத்தின் வழியாக வந்தபோது, மோட்டார் சைக்கிளை மெதுவாக நகர்த்தி, கழகத் தோழர்கள் நிற்கிறார்களா என்ற தேடிக் கொண்டிருந்த நிலையில், பா.ஜ.க.வினர் கூட்டமாக ஓடிவந்து, தனியாக சிக்கிய தோழரை தாக்கத் தொடங்கினர். ஆடிட்டர் ரமேஷ் என்ற பா.ஜ.க. பார்ப்பனர், ‘அவனைப் பிடித்து நொறுக்குங்கடா’ என்று கூச்சல் போட்டுக் கொண்டு முதலில் வெளியே ஓடிவந்தார். கும்பல் மோட்டார் சைக்கிளைப் பிடித்துத் தள்ளியது; கழகத் தோழர் மணிமாறனைத் தாக்கியபோது, காவல்துறை தோழரை மீட்டு, திருமண மண்டபத்துக்கு அனுப்பி வைத்தது. வெறி பிடித்த மதவெறி சக்திகள் - சாய்ந்து கிடந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த தோடு, வண்டியின் பெட்ரோல் டேங்க் மீது கல்லைத் தூக்கிப் போட்டு உடைத்தது. பெரியார் படம் போட்டு எழுதப்பட்டிருந்த வண்டி எண் அறிவிப்பு பலகையையும் உடைத்தது. கையில் தடி கற்களுடன் திரிந்த மதவெறி யர்கள் கழகத்தினரை கைது செய்து ஏற்றி சென்ற காவல்துறை வேன்கள் மீது கற்களை வீசினர். ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு, அந்தப் பகுதியே பரபரப்பாக காட்சியளித்தது.

திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கழகத் தோழர் களிடையே கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாதேஷ் (கோனூர் விவசாயிகள் சங்கம்), செந்தில் (குடியுரிமை பாதுகாப்பு நடுவம்), கண்ணன் (கஞ்சமலை பாதுகாப்பு இயக்கம்) ஆகியோர் பேசினர்.பா.ஜ.க. சங்பரிவார் கும்பலின் மதவெறி வன் முறைகள் மற்றும் டாக்டர் விநாயக் சென்னின் மக்கள் நலப்பணிகள் பற்றி விரிவாக பேசப்பட்டு கருத்தரங்கம் போல் நிகழ்ச்சி நடந்தது.

பா.ஜ.க. செயற்குழு மாலை 6.45 மணிக்கு முடியும் வரை, தோழர்கள் திருமண மண்டபத்திலேயே வைக்கப் பட்டு, பிறகு, விடுவிக்கப்பட்டனர். தோழர்கள் அனைவரும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை யில் சூரமங்கலம் காவல்நிலையம் வரை ஊர்வலமாகச் சென்றனர். கழகத் தோழர் தாக்கப்பட்டு, மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டது பற்றி காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. புகாரை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையைத் தந்த பிறகே கலைந்து செல்வோம் என்று கழகத்தினர் காவல்நிலைய வாயிலேயே நின்று விட்டனர். இரவு 8.30 மணி வரை காவல் நிலையத்திலே இருந்து முதல் தகவல் அறிக்கையின் பிரதியைப் பெற்ற பிறகே - தோழர்கள், கலைந்து சென்றனர். மதவெறி சக்திகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்த்து - பாராட்டுகள் குவிகின்றன

அண்மைக் காலமாக வன்முறைகளை கையில் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டில் கலவரங்களை நடத்தி வந்த சங்பரிவார் - பா.ஜ.க. வன்முறைகளுக்கு எதிராக சேலத்தில் பெரியார் திராவிடர் கழகம் - சுற்றுச் சூழல், மனித உரிமை அமைப்புகளோடு இணைந்து வெளிப்படுத்திய எதிர்ப்பு மதச்சார்பின்மையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு அமைப் பினரும் தங்கள் மகிழ்ச்சியை நேரிலும், பேசிகள் வழியாகவும் பகிர்ந்து வருகின்றனர். திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தோழர்களை விடுதலை சிறத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் உஞ்சை அரசன், அரங்க செல்லத் துரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மார்க்சிய பெரியாரிய பொது வுடைமை கட்சித் தோழர்கள், கவிஞர் தமிழேந்தி, திருச்சி கலிய பெருமாள், த.தே.பொ.க. தோழர் பிந்துசாரன் உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்து, பாராட்டுகளைத் தெரிவித்தனர். சூரமங்கலம் காவல் நிலையத்தில் தோழர்கள் திரண்டிருக்கும் செய்தி கிடைத்தவுடன், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும், உணர் வாளர்களும் தங்கள் மகிழ்ச்சி, வாழ்த்துகளைத் தெரிவித்த காட்சி உணர்ச்சிபூர்வமாக இருந்தது.
- நமது செய்தியாளர்

நளினியை விடுதலை செய்க!

17 ஆண்டுகளாக சிறையில் வாடும் நளினி, இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு தமிழக அரசு அண்ணா நூற்றாண்டு விழாவை யொட்டி வழங்கியுள்ள ‘பொது மன்னிப்பின்’ கீழ், விடுதலை செய்வதில் தமிழக அரசு முறைகேடாக செயல்பட்டிருப்பதை, உயர்நீதிமன்றம் திட்டவட்ட மாகக் கூறியிருக்கிறது. இவர்களை விடுதலை செய்யவே கூடாது என்று ஏற்கனவே முடிவெடுத் துக்கொண்டு கலைஞர் ஆட்சி செயல்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


முதலில் - இந்த வழக்கில் தம்மையும் இணைத் துக் கொள்ளுமாறு, சுப்ரமணியசாமி மனுதாக்கல் செய்தபோது, தமிழக அரசு அம்மனுவை நிராகரிக் கக் கோரியது. அதற்கான காரணம் - சுப்ரமணிய சாமி கோரிக்கையில் அரசுக்கு உடன்பாடு இல்லை என்பது அல்ல; சுப்ரமணியசாமியின் கோரிக்கையை தி.மு.க. அரசே தீவிரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது, அவர் தனியாக ஏன் மனு செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் கருத்தாக அமைந்துள்ளது.

இவர்களின் மீதான வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்ததால் - இதில் முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசு தான் என்று ‘பந்தை’ மத்திய அரசின் மைதானத்துக்குள், தள்ளிவிட, கலைஞர் ஆட்சி முயற்சித்தது. இதை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறிவிட்டது.

நளினியின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் எஸ். துரைசாமி முன் வைத்த வாதங்கள் மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். அந்த வாதங்களை நீதிபதி அப்படியே ஏற்று, தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர். நளினியின் விடுதலைகோரும் மனுவை பரிசீலிக்கக்கூடிய சிறை ஆலோசனைக் குழுவின் கூட்டம் - சிறை விதிகளின்படி நடக்கவில்லை என்று கூறிய உயர்நீதிமன்ற நீதிபதி வி.எஸ். நாகமுத்து, எட்டு குறைபாடுகளை பட்டியலிட் டுள்ளனர். இந்த சட்ட நுணுக்கங்களுக்குள் நாம் நுழைய விரும்பவில்லை. தார்மீகப்படியும் நியாயப்படியும் சில கேள்விகளை தமிழக அரசின் முன் வைக்கிறோம்.

ராஜீவ் கொலையில் தொடர்புபடுத்தப் பட்டவர்கள் என்பதற்காகவே அவர்கள் வாழ்நாள் முழுதும் சிறையிலே அடைபட்டுக் கிடக்க வேண்டும் என்று அரசு கருதுகிறதா? ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனை காலத்தை 7 ஆண்டுகளாகக் குறைத்து, மனித உரிமையில் மகத்தான சாதனை புரிந்துள்ள கலைஞர் ஆட்சி, 17 ஆண்டு காலம் சிறையில் - அதுவும் தனிமைச் சிறையில் வதைப்பட்டுள்ளவர்களை விதிகளுக்கு புறம்பான வழிகளைப் பின்பற்றி சிறையிலேயே அடைத்து வைக்க முடிவெடுப்பது நியாயம் தானா? அரசியல் கூட்டணிப் பார்வை மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளிலும் முடிவெடுப்பதற்கான அடிப்படையான காரணமாக இருக்க வேண்டுமா? இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ள சுமார் 1400 சிறைக் கைதிகளில் பெரும்பாலோர் கொலைக் குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்கள் தானே! நளினியும் - அதேபோல் ஒரு குற்றத்தில் அதுவும் நேரடியாக தொடர்பு இல்லாத ‘குற்றச் சாட்டில்’ அதுவும், தி.மு.க. எதிர்த்து வந்த கருப்புச் சட்டமான ‘தடா’ சட்டத்தின் கீழ் தண்டிக்கப் பட்டவர் தானே!

சோனியாகாந்தி அம்மையாரும், அவரது மகள் பிரியங்காவும் கருணையோடு இந்தப் பிரச் சினையை அணுக விரும்பும்போது, கலைஞர் மட்டும், இதில் தயக்கம் காட்டுவதில் நியாய மிருக்கிறதா? அதிகாரத்தை உறுதியாக - கொள்கை முடிவுகள் எடுப்பதற்குப் பயன்படுத்துவதில் கலைஞர் தயக்கம் காட்டலாமா? பார்ப்பனர்களும், பா.ஜ.க.வினரும், தங்களது அதிகாரத்தைத் துணிவோடு பயன்படுத்துகிறார்களே?

உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு - ஒரு நல்ல வாய்ப்பாகும்; இதைப் பயன்படுத்தி நளினியை விடுதலை செய்யும் முடிவை எடுப்பதே விவேக மானது; கலைஞர் செய்வாரா?

தலித் மாணவி படுகொலை காவல்துறை அலட்சியத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சத்திய மங்கலம் - கிச்சரகம்பாளையத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 14 வயது மாணவி புனிதா, பாலியல் வன்முறையில் படுகொலை செய்யப்பட்டார். ஆக°டு மாதம் 8 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. ஆனால், காவல்துறை, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தடய சோதனைகளைக்கூட மேற்கொள்ளாமல், காவல்துறை காட்டும் அலட்சியத்தைக் கண்டித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன் 29.6.2008 வெள்ளி காலை 10 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடந்தது.

ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான கூட் டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட் டத்தில் இந்த வழக்கு சி.பி.சி.அய்.டி. விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர்மணி, பாலசுந்தரி (பா.ம.க. பொதுச்செயலாளர்), வி.பி.குண சேகரன் (ஈரோடு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்), வழக்கறிஞர் பாப்பா மோகன், மக்கள் உரிமைக் கழக மாநில பொதுச் செயலாளர் பாலமுருகன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க பொதுச் செயலாளர் நிலவன் உள்ளிட்ட பல் வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர். ‘ஆம்னெஸ்டி இன்டர் நேஷனல்’ என்ற சர்வதேச பொது மன்னிப்பு சபை - இவ்வாண்டை மாணவிகள் பாதுகாப்பு ஆண்டாக அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி, தலித் மாணவியின் படு கொலையில் காவல்துறை அலட்சியத்தைக் கண்டித்தனர்.

மவுனம் சாதிக்கிறார். ‘இளவல்’ வீரமணி, இதை விரும்ப மாட்டார் என்பதற்காக, நியாயமான ஒரு செயலை அரசு முடக்குவது சரியாகுமா என்பதே நமது கேள்வி! பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க ‘தி.க.சி.’ கோரிக்கை“எழுத்தாளர் தி.க.சி. ‘தீக்கதிர்’ நாளேட்டில் எழுதி வெளிவந்த கடிதம். (26.9.2008)

சமூக அநீதியை - பொருளாதார அநீதிகளை முறியடிப்போம்” எனும் பி.சம்பத் கட்டுரை (‘தீக்கதிர்’ 17.9.08) படித்தேன்.கட்டுரை, தந்தை பெரியாரின் பேச்சுகளையும், எழுத்துகளையும் சான்று காட்டி, எழுச்சியூட்டும் வண்ணம் கச்சிதமாக எழுதப் பெற்றுள்ளது. பாராட்டுக்கள்.

கட்டுரையின் தொடக்கத்தில், “1929 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு மாநாட்டில் பெரியாரின் முழக்கம் இது” என்று குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு குறிப்பிடப்படும் கருத்துக்களும், பெரியாரின் புரட்சிகர முழக்கங்களும், எழுத்துக்களும், சிந்தனை களும், தமிழக மக்களிடையே - குறிப்பாக ஏழை - எளிய அடித்தட்டு மக்களிடையே, பெரி யாரின் 130 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில் அதிகம் பரவவில்லை என்பது கசப்பான உண்மை.
இந்த இழிநிலையை மாற்ற, பெரியாரின் படைப்புக்கள் (எழுத்துக்கள், தலையங்க உரைகள் முதலியன) நாட்டுடைமை ஆக்கப் பெற வேண்டும். இதற்கு இடதுசாரிக் கட்சிகளும், தலைவர்களும், ஏடுகளும், தமுஎச போன்ற கலை இலக்கிய அமைப்புகளும் முயற்சியெடுக்க வேண்டும்.
- தி.க.சி., நெல்லை.

சென்னை கரு.அண்ணாமலை இல்லத் திருமண விழா

தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் கரு. அண்ணாமலையின் மைத்துனியும், வேலு - அம்மா கண்ணு ஆகியோர் மகளுமான வே. பாக்கியா, குஞ்சிதபாதம்-வசந்தா ஆகியோரின் மகன் கு. சரவணன் இவர்களுடைய திருமணம் 14.9.2008 அன்று காலை 9 மணியளவில் கலைஞர் கருணாநிதி நகர் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடந்தது. கழகத் துணைத்தலைவர் ஆனூர் கோ. செகதீசன், வழக்கறிஞர் செ. துரைசாமி, வழக்கறிஞர் சு. குமாரதேவன், வழக்கறிஞர் இளங்கோவன், அன்பு தனசேகர் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினர். கழகப் பொறுப்பாளர்களுக்கு ‘பெரியார்’ படம் போட்ட சுவர் கடிகாரத்தை கரு. அண்ணாமலை திருமண வரவேற்பாக வழங்கினார். மணமக்கள் சார்பாக ‘புரட்சி பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினர்.

கழகம் எடுத்த பெரியார் விழாக்கள்!

ஈரோடு மாவட்டத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியார் 130 வது பிறந்த நாள் விழா. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் கழகக் கொடி ஏற்றப்பட்டது.
கோபி பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன் தலைமை வகித்தார். தலைமைக் கழகப் பேச்சாளர் கா.சு. வேலுச் சாமி, மாவட்ட அமைப்பாளர்கள் சதுமுகை பழனிச் சாமி, புதுரோடு சிதம்பரம், இளைஞரணி அமைப்பாளர் கருப்பண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பெருந்துறை ஒன்றியம் கூதாம்பி - வெள்ளாங் கோவில் பிரிவில் மாக்கானாங்கோம்பை பாலசுப்பிரமணி முதல் கொடியை ஏற்றி வைத்து ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.

தந்தை பெரியாரின் உருவப்படம் பெரிய அளவில் தயாரித்து, மாலைளால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப் பட்ட வேன் முன் செல்ல, பேண்டு வாத்தியங்கள், மத்தளங்கள், இசைக் கருவிகள் ஒலி முழங்கத் தொடங்கிய ஊர்வலம், 30-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் தொடர்ந்து கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்க பல்வேறு ஊர்களின் வழியாகச் செல்லத் தொடங்கியது.

சிறுவலூர் பேருந்து நிறுத்தத்தில் தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பெருந்துறை ஒன்றியச் செயலாளர் அர்ச்சுனன் இங்கு கொடியேற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து கொளப்பளூர் நகரை அடைந்தது ஊர்வலம். மூப்பன் சாலைப் பிரிவில் பெரியார் பஞ்சாலைத் தொழிலாளர் கழகத் தலைவர் து.ஜெயக்குமார், கிழக்குத் தோட்டம் பெரியார் நகரில் நேதா ஆசை, புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளி நிறுத்தத்தில் சரவணன், அருவங்கொரையில் ம. நிவாசு, குருமந்தூர் பிரிவில் சுப்பிரமணி, அம்மன் கோவில் பதியில் க. மூர்த்தி, கும்மிக்கருக்கில் செல்வராஜ் ஆகியோர் கழகக் கொடியேற்றி வைத்தனர்.


கொளப்பளூர் பேருந்து நிறுத்தக் கொடிக் கம்பத்தில் தோழியர் த. ரஞ்சிதமணி கொடியேற்றினார். கழக நகைச்சுவைப் பேச்சாளர் வேலுச்சாமி சமூகநீதிக்காக தந்தை பெரியார் ஆற்றிய தொண்டினை எளிமையாக எடுத்துக் கூறி உரை நிகழ்த்தினார்.காமராஜ் நகர் அருகில் பகுத்தறிவு நெறியாளரும், தி.மு.க. பிரமுகருமான அருள்மணி, மளிகைக் கடை கணேஷ் ஆகியோர் அன்புடன் வரவேற்று அனைவருக் கும் இனிப்புகள் வழங்கியதுடன் ஆர்வத்துடன் ஊர் வலத்திலும் பங்கு கொண்டனர். பெரியார் படத்திற்கு மலர் தூவி மாலையணிவிக்கப்பட்டது. அருகிலுள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. வேட்டைக்காரன் கோயிலில் கொடிவேரி கிளைத் தலைவர் கோவிந்தன், மொடச்சூரில் காசி பாளையம் சுப்பிரமணி, ஜோதி நகரில் சு. வேலுச்சாமி, நாய்க்கன்காட்டில் கூடக்கரை அருளானந்தம், ஜீவா பணிமனை அருகில் கோபி நகரத் தலைவர் நாகப்பன் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.

கோபி - ஈரோடு முதன்மைச் சாலையில் அமைந் துள்ள பா. வெள்ளாளபாளையம், பொலவக்காளி பாளையம் ஆகிய ஊர்களில் புதியதாக கழகக் கொடிக் கம்பங்கள், ஆசிரியர் சோமசுந்தரம், நேதா ஆகியோர் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. அருள்மணி, தி.மு.க. பிரமுகர் பெருமாள் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர். ஓய்வு பெற்ற அஞ்சலக அதிகாரி நேதாஜி முன்னிலை வகித்தார். பின்பு, தாசம்பாளையத்தில் தோழர் பழனிச்சாமி கொடியேற்றிய பின்பு கோபி நகருக்குள் ஊர்வலம் நுழைந்தது. ஒரே சீராக அழகுற நீண்ட வரிசையில் வந்த கருஞ்சட்டைப் படை ஊர்வலம், பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்தது.

கோபி கடைவீதிகள், முக்கியச் சாலைகள் வழியாக வாகன ஊர்வலம் பெரும் ஒலி முழக்கங்களுடன் வந்த போது அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் இருந்தோர் பெருமளவில் பார்த்து வியந்தனர். ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

கோபி பேருந்து நிலையத்தில் கற்பகம், மூன்று முக்கு அரசமரத்தடியில் சித்ரா தையலர், நாராயணன், வாய்க்கால் விதியில் கனகராஜ், கச்சேரி மேட்டில் பி.சிவராஜ், கரட்டடிபாளையத்தில் மாவட்ட அமைப்பாளர் ரகுநாதன், ல.கள்ளிப்பட்டிப் பிரிவில் சித்தா பழனிச்சாமி, கள்ளிப்பட்டியில் மூர்த்தி ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.

செப்டம்பர் 17 அன்று காலையில் தொடங் கிய ஊர்வலம் மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. கோபி நகரத் தலைவர் நாகப்பன் இல்லத்தில் அனைத்து தோழர்களுக்கும் சிறப்பான புலால் உணவு வழங்கப்பட்டது.
கூடக்கரை

நம்பியூர் ஒன்றியம் கூடக்கரை கிராமத்தில் பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.புதிய கழகப் பெயர்ப் பலகையை நம்பியூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.எ°.சென்னி மலை திறந்து வைத்து, கழகக் கொடியையும் ஏற்றி வைத்தார். அய்யா படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி சிறப்பித்தார்.தி.மு.க. பிரமுகர்கள் சுப்பிரமணி, தனுஷ்கோடி, பொன்னுசாமி மற்றும் கழகத் தோழர்கள் அருளானந்தம், கலைச் செல்வன், சிவராசு, சண்முகம், செல்வன், சசி, மனோஜ், முருகேசன், சேகர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

காவேரிப்பட்டினம்
செப்டம்பர் 15 ஆம் நாள் திங்கள் கிழமை பேரறிஞர் அண்ணா 100வது பிறந்த நாளையொட்டி காவேரிப் பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தின் முன்புள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு காலை 9 மணி யளவில் காவேரிப்பட்டினம் ஒன்றிய அமைப்பபாளர் பையூர் தி.க. இளையராசா தலைமையில் மாவட்ட அமைப்பாளர் ஆர்.கணணன், மாவட்ட துணை அமைப்பாளர் தி.குமார், கோ. பிரேம்குமார், நகர அமைப்பாளர் கோ. ஆனந்தன், மா. சேகர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.செப்டம்பர் 17 , பெரியாரின் 130வது பிறந்த நாளை யொட்டி, காவேரிப்பட்டணம் பேரூராட்சி அலுவலகத் தின் முன்பு பெரியார் உருவ படத்திற்கு காலை 10 மணியளவில் ஒன்றிய அமைப்பாளர் பையூர் தி.க. இளையராசா தலைமையில் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட அமைப்பாளர் ஆர். கண்ணன், மாவட்ட துணை அமைப்பாளர் தி.குமார். கோ. பிரேம்குமார், நகர அமைப்பாளர் கோ. ஆனந்தன், மனோஜ்குமார், மா. சேகர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் இளங்கோ, ம.தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ருத்ரன், மாதையன், பா.ம.க. ஒன்றிய செயலாளர் பெரியண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் நரசிம்மன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய அமைப்பாளர் சிவக்குமார் மற்றும் கழக தோழர்கள் அனைத்து கட்சி தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் பையூரிலுள்ள பெரியார் உருவ சிலைக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சீர்காழி17.9.2008 அன்று காலை 10 மணி அளவில் சீர்காழி புதிய பேருந்துநிலையம் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு நகர செயலாளர் பா. பிரபாகரன் தலைமையில் சீர்காழி ஒன்றிய துணைத் தலைவர் பொன். தேவேந் திரன் மாலை அணிவித்தார். கொள்ளிட ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் கொடியேற்றி வைத்தார். சீர்காழி ஒன்றியத் தலைவர் இரா.ச.விசயகுமார் வரவேற்புரை யாற்றினார். நகர தலைவர் சீர்காழி பெரியார் செல்வம் சிறப்புரையாற்றினார். மாணவரணி அமைப்பாளர் இன்பசேகரன், ரகுநாத், மாவட்ட துணைத்தலைவர் சோம. ராசராசன், புரட்சி கலை இலக்கிய மன்ற செய லாளர் அன்பு, ராசப்பா, வழக்கறிஞர்சோமசுந்தரம் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். கொள்ளிட ஒன்றியத் தலைவர் நந்த. ராசேந்திரன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். சீர்காழி ஒன்றிய துணை செயலாளர் இரா. மே. இராமமூர்த்தி நன்றி கூறினார்.

கொள்ளிடம் ஒன்றியம்கொள்ளிட ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் தலைமையில் நகர தலைவர் பெரியார் செல்வம் , சீர்காழி ஒன்றிய துணை செயலாளர் இரா.மே. இராமமூர்த்தி ஆகியோர் கொள்ளிட ஒன்றிய பகுதிகளில் கழக கொடி யேற்றி இனிப்புகள் வழங்கினர். கொடியேற்று விழாவில் கொள்ளிட ஒன்றிய பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை17.9.2008 அன்று பெரியார் 130வது பிறந்த நாள் விழா காலை 8.30 மணியளவில் சென்னை பட்டாளத்திலுள்ள பெரியார் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் தோழர்களுடன் சென்று மாலை அணி வித்தார். 9 மணியளவில் அண்ணா சாலை யிலுள்ள பெரியார் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் மாலை அணி வித்தனர். பின்னர் இரண்டு சக்கர வாகனம், ஆட்டோக்கள் என 100க்கும் மேற்பட்ட தோழர்களுடன் ஊர்வலமாக சேத்துப்பட்டு, தியாகராயர் நகர் ஆகிய இடங்களிலுள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து, ஆயிரம் விளக்கு, ஆல்தோட்டம் பகுதியில் தோழர்கள் லியாஸ், வேழவேந்தன் ஏற்பாடு செய்திருந்த பெரியார் கருத்துக்கள் அடங்கிய கழகப் பெயர் பலகையை திறந்து வைத்து உரையாற்றினர். பின்னர் இராயப்பேட்டையிலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். 11 மணி அளவில் இராயப் பேட்டை சைவ முத்தையா 5வது தெருவில் கழகக் களப்பணியில் உயிர் நீத்த கண்ணன். குமார் நினை வாக பெரியார் இரவு பாடசாலையை திறந்து வைத்து கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அன்பு தனசேகர் ஆகியோர் உரையாற்றினர். மாணவ மணி களுக்கு நோட்டு பென்சில், பேனா வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு கு. சபரி தலைமை தாங்க சு. பிரகாசு வரவேற்க கோ. சீனு முன்னிலை வகித்தார். ச. சர வணன் நன்றி கூறினார்.பகல் 12.30 மணியளவில் திருவல்லிக்கேணி அனுமந்தபுரம் பகுதியில் பெரியார் 130வது பிறந்த நாள் விழா அம்பேத்கர் இரவு பாட சாலை மற்றும் நூலகம் சார்பாக தோழர்கள் செல்வம், தம்பித்துரை, பாபு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பெரியார் 130வது பிறந்த நாள் கேக்கை வெட்டி உரை நிகழ்த்தினார் கழக வழக்கறிஞர் சு. குமாரதேவன். அனைவருக்கும் புலால் உணவு வழங்கப்பட்டது.

பெரியார் 130வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் 18.9.2008 வியாழன் மாலை 6.30 மணியளவில் இராயப்பேட்டை வி.எம். தெரு பெரியார் சிலை அருகில் சமர்ப்பா குமரன் குழுவினரின் இன எழுச்சிப் பாடலோடு துவங்கியது. கி. முருகன் வரவேற்க, தபசி. குமரன், கரு. அண்ணாமலை முன்னிலை வகிக்க ச. குமரன் தலைமையேற்றக் கூட்டத்தில் இயக்குனர் சீமான் சிறப்புரையாற்றினார். கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், இளைஞர் இயக்கம் டாக்டர் எழிலன், எ. கேசவன், அன்பு தனசேகர் ஆகியோர் உரையாற்றினர். சு. ஆனந்தன் நன்றி கூற கூட்டம் 10.30 மணியளவில் முடிவுற்றது. மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமையில் நிகழ்ச்சியை தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாதது ஏன்?

திரிபுவாத திம்மன்கள் - யார்? (3)

பெரியாரை பரப்புவதைவிட, திரிபுவாத திம்மன்களிடமிருந்தும் சுயநலத் துரோகி கூட்டத்திலிருந்தும் அவரைப் பாதுகாப்பதே முக்கியம்! (புத்தர் கொள்கையை திரித்தது போன்ற ஆபத்திலிருந்து) அய்யா அவர்தம் உண்மைத் தொண்டர்களின் பணி அதுதான்.”- மீ.கி.வீரமணி, ‘விடுதலை’ (30.8.2008)
மேலே எடுத்துக்காட்டிய “24 காரட் பொன் மொழிகளுக்கு” முழு உரிமை படைத்த ஒரே தலைவரான வீரமணி தான் ‘திரிபுவாத திம்மன்’ ஆக செயல்பட்டு வருகிறார் என்பதற்கு கடந்த இதழ்களில் பல்வேறு புரட்டல்களை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ எடுத்துக்காட்டியிருக்கிறது. ஆனால் ‘விடுதலை’யின் ‘அதிர்ச்சி’ எழுத்தாளர்கள் பேனாவை மூடிக் கொண்டு விட்டார்கள்.பெரியாரியலையே புரட்டிக் கொண்டிருக்கிற இவர்கள் - அவற்றை கடந்தகால வரலாறுகளில் செய்தால்கூட பலருக்கும் தெரியாது போக வாய்ப்பு உண்டு. நடப்பு நிகழ்வுகளிலேயே - இந்தப் புரட்டுகளை வெட்க மின்றி அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்; இதோ, ஒரு புரட்டு.

கலைஞர் தலைமையில் நடக்கும் தி.மு.க. ஆட்சி, அனைத்துசாதி யினரும் அர்ச்சகராகலாம் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமியற்றிய பிறகு, அதை எதிர்த்து உச்சநீதிமன்றத் தில் மீண்டும் வழக்கு தொடரப் பட்டது. என்ன காரணத்தினாலோ, தமிழக அரசு சட்டப்படியான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை. கலைஞர் மிகவும் சாதுர்யத்தோடு செயல்படுவதாக கி.வீரமணி அதை பாராட்டினார். தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெறும் பயிற்சி நிறுவனங்கள், தமிழ்நாட்டின் 6 முக்கிய கோயில்களில் ஏற்படுத்தப்பட்டு, அனைத்து சாதியினருக்கும் பயிற்சிகளும் தரப்பட்டன. பயிற்சி முடித்து வெளியே வந்த மாணவர்கள் இப்போது அர்ச்சகராக முடியவில்லை.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முடியாது என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது என்று ‘இந்து’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

“அர்ச்சகருக்கான ஓராண்டு பயிற்சியை முடித்தவர்கள், இப்போது தாங்கள் பெற்ற பயிற்சியைப் பயன்படுத்தக்கூடிய வேறு ஏதாவது மாற்று வேலைகள் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள், அர்ச்சகர் வேலை கிடைக்கும் என்று காத்திருப்பது, நீண்டு கொண்டே போகிறது. காரணம் - உச்சநீதிமன்றத்தில், வழக்கு இருப்பதால், அரசாங்கம், சாதி வேறுபாடற்ற அர்ச்சகர் நியமனத்தை நிறுத்தி வைத்துவிட்டது” என்று செய்தி வெளியிட்டுள்ளது ‘இந்து’ ஏடு.

இதை ‘விடுதலை’ நாளேடு எப்படி வெளியிட்டிருக்கிறது? “அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டதன் பலன்கள்; அரசுப் பணிக்கு முன்பே அர்ச்சகராகப் பணி புரிகிறார்கள்; ‘தி இந்து’ ஏட்டின் படப்பிடிப்பு” என்று புரட்டி செய்தி போடுகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதையோ, வழக்கின் காரணமாக - அறநிலையத் துறையின் கீழ் உள்ள ஆகமக் கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்பதை அரசு நிறுத்திவிட்டது பற்றியோ, ‘இந்து’ வெளியிட்டதை இருட்டடித்து விட்டு, ‘விடுதலை’, ‘இந்து’ ஏட்டின் செய்தியை திரித்து மொழி பெயர்க்கிறது.

ஆகமங்களுக்கு உட்படாத கிராமக் கோயில்களில், தனியார் கோயில்களில் அர்ச்சகர்களாக ஏற்கனவே பார்ப்பனரல்லாதார் இருக்கிறார்கள். பெரியார் எழுப்பிய பிரச்சினையே ‘பார்ப்பனருக்கு மட்டுமே அர்ச்சகர் உரிமை உண்டு’ என்பதை நிலைநாட்டும் ஆகமக் கோயில்களில் அதைத் தகர்த்து, அதன் மூலம் ‘கர்ப்பகிரகத்துக்குள்’ நிலைநாட்டப்பட்டுள்ள ‘சூத்திர’ இழிவுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படவேண்டும் என்பது தானே! அந்த மாற்றம் இப்போது வந்துவிட்டதா? இந்தக்கேள்விக்கு ‘இல்லை’ என்பதுதான் பதில்.உச்சநீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளாமல், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கிய அரசின் முடிவு தோல்வியில் முடிந்துவிட்டது. இது யார் தந்த ஆலோசனை? கலைஞர் எடுத்த ‘சாதுர்யமான’ முடிவு என்று, கி.வீரமணி பாராட்டியதற்கான காரணம் என்ன?

(‘31சி’ புகழ் !) வீரமணிதான் ஆலோசனை வழங்கினாரா? மீண்டும் தோல்வியில் முடிந்து விட்டதா? - இந்தக் கேள்விகள் - மக்கள் மன்றத்தில் எழத்தானே செய்யும்?

அதற்காக - மக்களை உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு குழப்பலாமா? செய்திகளையே திரித்து வெளியிடலாமா? ‘முரசொலி’ நாளேடுகூட இப்படி திரித்துப் போட்டு வெளியிட முன் வராத நிலையில் ‘விடுதலை’ ஏன், இப்படி புரட்டல் வேலை செய்கிறது?

ஏதோ, வேலை வாய்ப்புக்காக - அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது போலவும், அந்த நோக்கம் வெற்றிப் பெற்றது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி பெரியார் கொள்கையை திரிப்பது புரட்டு அல்ல! மகா புரட்டு!திரிபுவாத திம்மன்கள் பதில் கூறுவார்களா?

(புரட்டுகள் உடைப்பு தொடரும்)

ரங்கநாதபுரத்தில் கழகக் கிளை

7.9.2008 ஞாயிறு மாலை 5.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் நம்பியூரில் உள்ள ‘ரங்கநாதபுரம்’ என்ற பகுதியில் புதிய கிளை துவக்க விழா மற்றும் கொடியேற்று விழா, பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நம்பியூர் பேருந்து நிலையம் அருகில் “தமிழின உரிமைக்கு எதிரிகள் யார்?” விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

முதலாவதாக ரங்கநாதபுரத்தில் கழகக் கொடியை பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் ஏற்றி வைத்தார். அடுத்து ரங்கநாதபுரம் பிரிவில் பெயர் பலகையை திறந்து வைத்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி கழகக் கொடியையும் தோழர்களின் கரவொலி, முழக்கத்திற்கிடையே ஏற்றி வைத்தார். பின்னர் நம்பியூர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த கழகக் கொடிக் கம்பத்தில் பொதுச்செயலாளர் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.

இருசக்கர வாகனங்களின் அணி வகுப்புக்கு பின்னர் கழகத் தலைவரும், பொதுச் செயலாளரும் ஜீப்பில் வந்து ஒவ்வொரு இடங்களிலும் கொடியினை ஏற்றி வைத்தது மிகுந்த எழுச்சியுடன் இருந்தது. பொதுமக்கள் ஆங்காங்கே நின்று கொண்டு இருளையும் பாராது வேடிக்கை பாhத்தனர்.

சரியாக 6 மணிக்கு பொதுக் கூட்ட மேடையில் குமாரபாளையம் “சமர்ப்பா குமரனின்” இசை நிகழ்ச்சி துவங்கியது. பாடல்கள் உணர்ச்சிகரமாக இருந்தது. எலத்தூர் செல்வக்குமார் தலைமையில் நாத்திகசோதி, ப. முருகன், சாமிநாதன், ப. அழகிரி ஆகியோர் முன்னிலையில் “தமிழின உரிமைக்கு எதிரிகள் யார்?” விளக்கப் பொதுக்கூட்டம் துவங்கியது.

மாவட்ட துணைத் தலைவர் கா.சு.வேலுச்சாமி மிகுந்த நகைச்சுவையுடன் உரையாற்றினார். மாவட்ட செயலாளர் இராம.இளங்கோவின் உரையைத் தொடர்ந்து, கழகப் பொதுச்செயலாளர் சிறப்புரையாற்றினார். இறுதியாக கழகத் தலைவர் நீண்ட நேரம் மிக நேர்த்தியாக தமிழினத்திற்கு எதிரிகள் ‘பார்ப்பனர்களே’! என்பதை பல்வேறு ஆதாரங்களை, சான்றுகளைக் கூறி உரை நிகழ்த்தினார். தலைவர் உரையாற்றும்போது மேடையில் நம்பியூர் பகுதியைச் சார்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் மாரியப்பன், தங்கவேலு ஆகியோர் மாலை அணிவித்து தலைவருக்கு தங்கள் அன்பை, ஆதரவை வெளிப்படுத்தினர்.

இறுதியாக ரங்கநாதபுரம் செயலாளர் இரமேசு நன்றி கூறினார். கூட்டத்தில் மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி நின்று பேச்சைக் கேட்டனர். தோழர்கள் செல்வக் குமார், அழகிரி, ரமேசு, முருகன், கூடக்கரை அருளானந்தம், கலைச்செல்வன், சாமிநாதன் ஆகியோர் மிகுந்த ஆர்வத்துடன் கடுமையாகப் பணியாற்றி, கொடித் தோரணங்கள், சுவரெழுத்து, சுவரொட்டி என பல்வேறு வகையில் விளம்பரம் நன்கு செய்திருந்தனர். நம்பியூர் முழுவதும் விழாக் கோலம் பூண்டிருந்தது.