இரு நெத்தியடி தீர்ப்புகள்!

அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகள் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஒன்று - சமூக நீதியைப் புதைக் குழிக்கு அனுப்பி வந்த மத்திய தேர்வாணையத்தின் பார்ப்பனப் போக்குக்கு எதிரானது; (22.3.2008) மற்றொன்று - தமிழ்நாட்டுக் கோயில்களில் சம°கிருதத்தில் மட்டுமே வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்ற பார்ப்பன இறுமாப்புக்கு எதிரானது; இரண்டுமே வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்புகள்; பார்ப்பன ஆதிக்கத்தின் முகமூடியைக் கிழித்துக் காட்டும் தீர்ப்புகள்.மத்திய அரசும், மத்திய அரசின் தேர்வாணையமும், அகில இந்திய சர்வீசுகளில் இழைத்து வந்த அநீதியை எதிர்த்து சமூகநீதி கோரும் பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்து வந்திருக்கின்றன. பெரியார் திராவிடர் கழகம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

பார்ப்பன அதிகாரவர்க்கம் - நாட்டை எப்படி ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு, இந்த வழக்கு, மிகச் சிறந்த சான்றாக நிற்கிறது.அய்.ஏஎஸ்., ஐ.பி.எஸ். போன்ற அகில இந்திய சர்வீசுகளில் தகுதி அடிப்படையில் திறந்த போட்டியிலேயே தேர்வு பெற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை, திறந்த போட்டியிலிருந்து விலக்கி, இடஒதுக்கீட்டுக்குரிய இடங்களில் நிரப்பும் தில்லுமுல்லுகளை மத்திய தேர்வாணையம் தொடர்ந்து செய்து வருகிறது. இதனால், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மேலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிக்கப்படுவதோடு, திறந்த போட்டியில், தகுதி அடிப்படையில் தேர்வு பெற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தகுதியான பணி வாய்ப்புகள் கிடைப்பதும் மறுக்கப்பட்டு வந்தது. இத்தனைக்கும் உச்சநீதிமன்றம் - இப்படி மாணவர்களை தேர்வு செய்வது முறையற்றது என்று ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது. (ஆர்.கே. சபர்வாலா வழக்கு மற்றும் சத்ய பிரகாஷ் வழக்கு) ஆனாலும் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கிய பிறகும், அதைத் தூக்கி, குப்பைக் கூடையில் வீசிவிட்டு, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் சட்ட விரோதமாக, தனது விதிகளில் 16(2) என்ற திருத்தத்தைக் கொண்டு வந்து, இடஒதுக்கீட்டுக்குரிய வேட்பாளர்கள் - தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டாலும், இடஒதுக்கீடு கோட்டாவின் கீழே தான் நிரப்பப்படுவார்கள் என்று திமிரோடு அறிவித்தது.

மத்திய சமூக நீதித் துறை அமைச்சகங்கள் இந்த சூழ்ச்சியைக் கண்டறிந்து, முதுகெலும்புடன் தட்டிக் கேட்கத் தவறி விட்டன. இத் துறைகளின் பார்ப்பன அதிகார வர்க்கம், தனது அதிகாரச் செல்வாக்கினால் துறை அமைச்சர் களைக்கூட கண்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் அகில இந்திய சிவில் சர்வீ° தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட 32 விண்ணப்பதாரர்கள் தகுதி போட்டியில் தேர்வு பெற்றிருந்தும்கூட, அவர்கள், இடஒதுக்கீடு கோட்டாவில் சேர்க்கப்பட்டு விட்டனர்.

இதனால், தகுதியான பணி வாய்ப்புகளை ஒதுக்குவதில் இவர்கள் புறந்தள்ளப் பட்டனர். பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தேர்வு பெறக்கூடிய 31 பேர் வாய்ப்பும் பறிக்கப்பட்டது. மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் முறைகேடான 16(2) வது விதி திருத்தம் சட்டவிரோதமானது என்று, பாதிக்கப்பட்ட ஆர். அருளானந்தம் மற்றும் இரமேஷ்ராம் என்ற மாணவர்கள் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். பார்ப்பனத் திமிருடன், நிர்வாகத் தீர்ப்பாயம், அந்தக் கோரிக்கைகளை புறந் தள்ளியது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர, வழக்கை விசாரித்த நீதிபதிகள், எலிப் தர்மாராவ், எ°.ஆர். சிங்காரவேலு ஆகியோர் ‘நெத்தியடி’ தீர்ப்பை வழங்கியுள்ளனர். மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு கொண்டு வந்த திருத்தம் சட்ட விரோதமானது. அது செல்லத்தக்கதல்ல என்று கூறிய நீதிபதிகள், 2004 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட தகுதியடிப்படையிலான பட்டியலை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் கொண்டு வந்த திருத்தம் சமூக நீதியை முன்னெடுப்பதற்குப் பதிலாக, பின்னுக்குத் தள்ளி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கான பயன்களைத் தடுப்பதாகும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

என்னதான் சமூக நீதிக்கான சட்டங்கள் வந்தாலும், அதை அமுலாக்கும் அதிகாரத்தில் உட்கார்ந்துள்ள பார்ப்பன அதிகார வர்க்கம் நந்திகளாக மாறி ‘நங்கூரம்’ போட்டு நிற்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆட்சி அதிகாரத்தின் ‘கடிவாளம்’ ‘அவாள்’களிடமே தங்கி நிற்கிறது.மற்றொரு முக்கிய தீர்ப்பு - தமிழில் அர்ச்சனை வழிபாடு நடத்துவது, ஆகமங்களுக்கு எதிரானது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தர்மராவ், கே. சந்துரு ஆகியோர் வழங்கியுள்ள தீர்ப்பாகும் (20.3.2008) இந்து கோயில் பாதுகாப்புக்குழு தலைவர் வி.எஸ். சிவகுமார், முகவை மாவட்டம் உத்திரகோச மங்கை கோயில் அர்ச்சகர் பிச்சை பட்டர் ஆகியோர் தொடர்ந்த வழக்கு இது. “பக்தர்கள் தங்கள் விருப்பத்தைக் கடவுளிடம் தெரிவிக்கும் போது, அவர்கள் விருப்பத்தில் குறுக்கிட்டு, சம°கிருதத்தில் மட்டுமே கூற வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. தேவநாகரி (சம°கிருதம்) மட்டும் தான் கடவுளுக்கு தெரியும் என்றும், அந்த மொழிக்கு இணையாக தமிழ் இல்லை என்பது போல் மனுதாரர்கள் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள்.

இந்த வாதத்தை நிராகரிக்கிறோம். தமிழ் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப் பட்டால், இந்து மதம் மியூசியத்தில் அடங்கிப் போகும் நம்பிக்கையாகி விடும் என்று டாக்டர் ராதாகிருஷ்ணனே கூறியுள்ளார் என்று, நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்னர். எப்போதாவது, நீதிமன்றங்கள் இத்தகைய நம்பிக்கைகள் தரும் நல்ல தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. பார்ப்பன மேலாதிக்கம், தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவே தொடர்ந்து முயற்சிக்கிறது என்பதைத் தான் இந்த இரு வழக்குகளும் உணர்த்துகின்றன.

மலையாளிகள் ஆதிக்கத்தைக் கண்டித்து கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்!

இந்திய அரசு அச்சகத்தின் பணி யாளர் தேர்வில் முறைகேடாக மலையாளி களை மட்டும் தேர்வு செய்ததைக் கண்டித்து கழகப் பொதுச்செயலாளர் கு. இராம கிருட்டிணன் தலைமையில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் கோவை யில் நடந்தது.கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகில் அமைந்துள்ள இந்திய அரசு அச்ச கத்திற்கு நர்ஸ், பியூன், கலாசி, வார்டுபாய், போர்மேன், எலக்ட்ரிசியன் உள்ளிட்ட 24 வகையான பணிகளுக்கு மொத்தம் 144 பேரை தேர்ந்தெடுக்க தேர்வு நடந்து வருகிறது. தேர்வுக் குழுவில் இந்திய அரசு அச்சக மேலாளர் பி.ஆர்.இராமச்சந்திரன், துணை மேலாளர் ரவீந்திரன், உதவி மேலாளர் ஆப்ரகாம் ஆகிய மூன்று பேரும் மலையாளிகள். தேர்வுசெய்யும் குழுவினர் 3 பேரும் மலையாளிகளாக இருந்தால் மலையாளிகள் மட்டுமே அதிகமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

மூன்றாம் நிலை, நான்காம் நிலை பணிகளுக்கேகூட அச்சகம் அமைந்துள்ள மாநிலத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகும். ஆகவே தேர்வுக் குழுவை மாற்றி அமைக்கக் கோரியும், பணியாளர்களாக தமிழர்களையே தேர்வு செய்ய வலியுறுத்தி யும் கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி கழகப் பொதுச்செயலாளர் கு. இராம கிருட்டிணன் தலைமையில் கோவையில் கழகம் ஆர்ப்பாட்டமும் நடத்தியது.ஆனால், தற்போது பணியாளர் தேர்வு நடந்து வருகிற நிலையில் இயந்திரங்களை இயக்கும் தேர்வில் மலையாளிகளுக்கு புதிய இயந்திரங்களை இயக்கவும், தமிழர்களுக்கு பழைய இயந்திரங்களை இயக்கி காட்டச் செய்து பாராபட்சம் செய்துள்ளார்கள் தேர்வுக் குழுவினர்.

உடனடியாக அனைத் துக் கட்சியினரையும் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தொடர்பு கொண்டு, ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 18.3.2008 செவ்வாய் கிழமை இந்திய அரசு அச்சகத்தின் எதிரில் அனைத்துக் கட்சி யினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் இனஉணர் வோடு எழுச்சியாக நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமை வகித்துப் பேசினார். மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கே.சின்னராசு (அ.தி.மு.க.), இந்திய கம்யூனி°ட் கட்சி ஒன்றிய செய லாளர் குணசேகரன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அ.அறிவரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலர் இரமேசு, லோக் ஜனசக்தி மாநில செயலர் வை. குப்புராசு, தமிழ் தேச விடுதலை இயக்க பொருளாளர் க. தேவேந்திரன், தே.மு.தி.க. பொதுக் குழு உறுப்பினர் ஆரோக்கியசாமி, கூடலூர் பேரூராட்சித் தலைவர் ரங்கசாமி (தி.மு.க.), தி.மு.க. மாநில பொதுக் குழு உறுப்பினர் கணேசமூர்த்தி, வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் (அ.தி.மு.க.), ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினர். ஊராட்சிமன்ற உறுப்பினர் முருகன் நன்றி கூறினார்.ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வெ. ஆறுச்சாமி, களப்பணி ஒருங்கிணைப்பாளர் ந. பிரகாசு, மேட்டுப்பாளையம் - பா. ராமச் சந்திரன், நகரத் தலைவர் த. சந்திரசேகரன், செயலர் சு. அமரன், கோவை - மாநகரத் தலைவர் ம.ரே. ராசக்குமார், செயலாளர் வே. கோபால், அலுவலக பொறுப்பாளர் சா. கதிவரன், பகுதி கழக பொறுப்பாளர்கள் ம. சண்முக சுந்தரம், கி. சீனிவாசன், மாவீரன் மதியழகன், இ.மு.சாஜித், பா. சத்யா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.தமிழ்நாடு மாணவர் கழக ந. பன்னீர் செல்வம். மகளிர் விடுதலை இயக்கம் - பழனியம்மாள், பட்டியம்மாள், லட்சுமி. டி.பி. சுப்பிரமணி (தலைவர் துடியலூர் பஞ்சாயத்து ஒன்றிய செயலர், தி.மு.க.), மு. அப்துல் ரகுமான் (காரமடை பேரூர் கழக தி.மு.க), எ°. ராஜேந்திரன் (வீரபாண்டி பேரூராட்சி துணைத் தலைவர், நகர செயலாளர் ம.தி.மு.க.), தா. ஆனந்த ராசு (ஒன்றிய தொண்டரணி செயலாளர் - ம.தி.மு.க.), ராஜேந்திரகுமார் (ஒன்றிய மாணவரணி துணைச் செயலாளர் - ம.தி.மு.க.), வி. யேசுதாசு (காரமடை பேரூர் கழக அமைப் பாளர்), பி.ஆர்.ஜி. அருண்குமார் (பெரிய நாயக்கன் பாளையம் பேரூராட்சி தலைவர் அ.தி.மு.க.), என் கிருஷ்ணன், (பெரிய நாயக்கன் பாளையம் நகர செயலாளர் அ.தி.மு.க.), ஜெயராமன், (வீரபாண்டி பஞ்சாயத்து தலைவர் , சி.பி.அய்.(எம்)), இராமச்சந்திரன் (சி.பி.அய்.எம்.), லோக் ஜனசக்தி - காரமடை அ. அன்வர் ராஜா, ஜே. அருள்ராஜ், மாவட்ட செயலாளர் இரா. மனோகரன், மாவட்ட இளைஞரணி செய லாளர் ஆ. ஆனந்தன். விடுதலை சிறுத்தை கள் கட்சி - மாவட்ட துணைச் செயலாளர் சு. ரமேசுகுமார், செய்தி தொடர்பாளர் ஜீவானந்தம், தொண்டரணி துணைச் செயலாளர் மு. செல்வக்குமார், பொ.நா. பாளையம் ஒன்றிய செயலாளர் பெருமாள். தே.மு.தி.க. - வீரபாண்டி நகர செயலாளர் டி. தங்கபாண்டியன், ஒன்றிய செயலாளர் பூமிதரன்.

பகத்சிங் பற்றி பெரியார் : ஆங்கில நாளேட்டின் கட்டுரை‘இந்து’ நாளேட்டில் (மார்ச். 22)

பெரியார் பார்வையில் பகத்சிங் என்ற கட்டுரையை புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளர் எஸ். இன்ஃபான்ஹபீப் எழுதியுள்ளார். பகத்சிங் தூக்கிலிடப் பட்டபோது, பெரியார் ‘குடிஅரசு’ பத்திரிகையில் எழுதிய தலையங்கத்தின் பகுதிகளை எடுத்துக்காட்டி, இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையைப் பாராட்டி ‘இந்து’ நாளேட்டில் (மார்ச் 24) புதுடில்லியிலிருந்து சேமன்லால் என்பவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் - பகத்சிங் பற்றி ‘குடிஅரசி’ல் பெரியார் எழுதிய கட்டுரை, 2006 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, பகத்சிங்கின் ‘சிறைக் குறிப்புகள் மற்றும் சிந்தனைகள்’ என்ற நூலில், சேர்க்கப்பட்டுள்ளது என்ற தகவலை பதிவு செய்துள்ளார். ‘இது’ லெப்ட் ஃபார்வர்டு’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நூலாகும். 1933 ஆம் ஆண்டு பகத்சிங்கின் “நான் ஏன் நாத்திகன்?” என்ற கட்டுரையை ப.ஜீவானந்தத்தின் மூலம் தமிழாக்கம் செய்து பெரியார் வெளியிட்டதையும், பகத்சிங் கருத்து முதன்முதலாக வேறு ஒரு மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட முதல் கட்டுரையே பெரியார் வெளியிட்டதுதான் என்றும் அந்தக் கடிதத்தில் சேமன்லால் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுரையில் இடம் பெற்றுள்ள தேதிப் பிழைகளை கடித;ம சுட்டிக்காட்டியுள்ளதோடு மற்றொரு முக்கிய தகவலையும் சுட்டிக் காட்டியுள்ளது. பகத்சிங் கரங்களில் விலங்கோடு, கட்டிலில் அமர்ந்துள்ள படத்தை ‘இந்து’ நாளேடு வெளியிட்டு, அது சிறைச்சாலைக்குள் இருந்தபோது எடுத்தப் படம் என்று குறிப்பிட்டுள்ளது. உண்மையில் அந்தப் படம் பகத்சிங் - லாகூர் காவல்நிலையத்தில் கைது செய்து வைக்கப்பட்டபோது எடுத்தப் படம். அந்தப் படத்தை லாகூர் காவல்நிலையத்திலிருந்த காவல்துறை ஆய்வாளர் ஒருவர் பதிவேடுகளிலிருந்து ரகசியமாக பாகி°தான் பிரிவினைக்கு முன்பு வெளியே கடத்தி வந்துள்ளார். சுதந்திரத்துக்குப் பிறகுதான், இந்தப் படம் வெளியே வந்தது என்ற தகவலையும், கடிதத்தில் சேமன்லால் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments: