‘தினமணி’க்கு பதிலடி-3- விடுதலை இராசேந்திரன்


சீர்காழியில் பிரச்சாரப் பயண எழுச்சி

சீர்காழிப் பகுதிகளில் மார்ச் 15, 16 தேதிகளில் எழுச்சியுடன் நடைபெற்ற பிரச்சாரப் பயணம் பற்றிய செய்தி தொகுப்பு.15.3.2008 காலை 11 மணியளவில் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் பெரியாரியல் பிரச்சாரப் பயணம் துவக்க நிகழ்ச்சி மாவட்ட தலைவர் இரா. பரசுராமன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகத்தன் சீர்காழி ஒன்றிய தலைவர் இரா.மே.ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். மா.பெ.பொ.க. மாவட்ட செயலாளர் முத்து அன்பழகன் புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்ற மாவட்ட செயலாளர் அன்பு ராசப்பா கருத்துரை வழங்கினர். கொள்ளிட ஒன்றிய அமைப்பாளர் பா. பாக்கியராசு, சீர்காழி நகர செயலாளர் பா. பிரபாகரன், ஒன்றிய தலைவர் இரா.விசயகுமார், ஒன்றிய துணைத் தலைவர் பொன். தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் தங்க பண்பரசன், நகர துணை செயலாளர்பி.தா. சந்தோசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிற்பிராசனின் ‘மந்திரமா, தந்திரமா’ மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பிரச்சார பயணத்தை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கு. பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார்.

அவர் உரை நிகழ்த்தும்போது, நான் முழுக்க முழுக்க சுயமரியாதைகாரன், என் தந்தை பெரியார் இயக்கத்தில் இன்று செயல்படுபவர் எனக்கு துளிக்கூட கடவுள் நம்பிக்கையும் கிடையாது. ஆனால் நான் கோவிலுக்கு செல்வேன். காரணம் நான் இருக்கிற பதவி. நான் கோவில் நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினராக செல்வேன். அங்கும் சென்று மக்களை சந்தித்து வாக்கு கேட்டு இருக்கிறேன் என்றார். மேலும் பெரியார் தத்துவத்தை விளக்கி உரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். ஏராளமாக பொது மக்கள் திரண்டு இருந்தனர்.

அரசூர் : அடுத்ததாக அரசூர் கிராமத்திற்கு 12 மணிக்கு பிரச்சாரப் பயணம் சென்றடைந்தது. சிற்பிராசன், மந்திரமா தந்திரமா? மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்தினார். அப்பகுதியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு அறியாமையில் இருந்து தெளிவு பெற்றனர்.புத்தூர் கடை வீதி : அடுத்து புத்தூர் கடைவீதிக்கு 1.30 மணி பிரச்சார பயணம் சென்றடைந்தது. மாவட்டத் தலைவர் இரா. பரசுராமன், புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்ற மாவட்ட செயலாளர் கருத்துரை வழங்கினார். சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மதிய உணவு த.மு.மு.க. தோழர் எருக்கூர் புகாரி பிரியாணி உணவு அளித்து சிறப்பு செய்தார்.கொள்ளிடம் கடை வீதி: கொள்ளிடம் கடைவீதிக்கு 4மணிக்கு பயணம் சென்றடைந்தது. மாவட்டத் தலைவர் இரா. பரசுராமன் கருத்துரை வழங்கினார். சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி இந்துத்துவா பற்றி மிக சிறப்பாக எழுச்சியுரையாற்றினார். ஏராளமான பொது மக்களும், பெண்களும் நிகழ்ச்சியைக் கண்டு பகுத்தறிவு தெளிவு அடைந்தனர்.

ஆச்சாள்புரம்: ஆச்சாள்புரம் கடைவீதிக்கு 6.15-க்கு பயணம் சென்றடைந்தது. சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சீர்காழி பெரியார் செல்வம் கலைக் குழுவினரின் ‘வந்து பாருங்கள் தெரியும்’ வீதி நாடகம் நடைபெற்றது. நாகடத்தில் பிள்ளையார் மோசடியையும், பல்வேறு மத மூட நம்பிக்கையை விளக்கி நற்சுவையுடன் நாடகம் நடைபெற்றது. பெரும் வரவேற்பை பெற்றது.புதுப்பட்டினம்: முதல் நாள் இறுதி நிகழ்ச்சி மாலை 7.40க்கு புதுப்பட்டினம் கடைவீதியில் மாவட்ட தலைவர் பரசுராம் கருத்துரை வழங்கினார். சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சீர்காழி பெரியார் செல்வம் கலைக் குழுவினரின் ‘வந்து பாருங்கள் தெரியும்’ வீதி நாடகம் மிக சிறப்பாக நடைபெற்றது. கழகத் தலைவர் சிறப்புரையாற்றினார். இரவு 10 மணியளவில் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இரவு புதுப்பட்டினம் கடற்கரை அருகிலுள்ள மடவாமேடு கிராமத்தில் தி.மு.க. பேச்சாளர் தோழர் அண்ணாதுரை இல்லத்தில் கழகத் தோழர்கள் அனைவருக்கும் சிறப்பாக விருந்தளிக்கப்பட்டது.

16.3.2008 இரண்டாம் நாள் பயணம்திருவாலி : 16.3.2008 ஞாயிறு காலை 11.30 மணியளவில் திருவாலி கடைவீதியில் சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. காலை உணவு நகர செயலாளர் பிரபாகரன் இல்லத்தில் கழகத் தோழர்களுக்கு வழங்கப்பட்டது.மங்கை மடம்: அடுத்தகட்டமாக பிரச்சாரப் பயணம் மங்கை மடம் கிராமத்திற்கு 12.20-க்கு சென்றடைந்தது. மாவட்டத் தலைவர் பரசுராமன் கருத்துரை வழங்கினார். சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மதிய உணவு திருவண்காடு ஆசிரியர் அன்பு செல்வம் அவர்களால் வழங்கப்பட்டது.

தர்மகுளம் : அடுத்த கட்டமாக தர்ம குளம் கடைவீதிக்கு பயணக் குழுவினர் சென்றடைந்தனர். மாலை 3.15க்கு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத் தலைவர் உரையை அடுத்து, சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடத்தி முடை நாற்றம் வீசூம் மூடபழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.பாகசாலை: மாலை 5.10 மணிக்கு பாகசாலை கிராமத்தில் பயணம் சென்றதும் மக்களே இல்லாத பகுதிபோல் இருக்கிறது. இப்பகுதியில் நிகழ்ச்சி நடத்த வேண்டாம் என்று தோழர்கள் முடிவு எடுத்தார்கள். ஆனால் சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியும், அவரின் மிகச் சிறந்த பேச்சால் மக்கள் அப்பகுதியில் ஏராளமாக கலந்துகொண்டனர்,.

கதிராமங்கலம்: பயணக்குழுவினர் மாலை 6 மணிக்கு கதிராமங்கலம் கிராமத்திற்குச் சென்றனர். மாவட்ட தலைவர் பரசுராமன் உரையைத் தொடர்ந்து, சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியாரியல் பயணம் சென்ற இடம் எல்லாம் கழகத் தோழர்களின் கொள்கை முழக்கம் விண்ணைப் பிளக்கும் அளவிற்கு இருந்தது.வைத்தீ°வரன் கோவிலில் பொதுக் கூட்டம்பயணத்தின் இறுதி நிகழ்வாக வைத்தீ°வரன்கோவில் கடைவீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் இரா. பரசுராமன் தலைமையேற்றார். தமிழ்நாடு மாணவர் கழகத்தின் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் அமைப்பாளர் பா. அருண் அனைவரையும் வரவேற்றார். சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நாடி சோதிடத்திற்குப் புகழ் பெற்ற ஊர் வைத்தீ°வரன்கோவில். அவ்வூரில் நாடி சோதிடத்தையும் பார்ப்பன பித்தலாட்டத்தையும் சிற்பிராசன் அம்பலப்படுத்தி உரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒரு மணி நேரம் எழுச்சியுரையாற்றினார். அவர் உரை கேட்க ஏராளமான பொது மக்கள் திரண்டனர். தலைவர் பேசும்போது, ஜெனரேட்டர் பழுது ஏற்பட்டதால் ஒலிபெருக்கி இல்லாமல் 20 நிமிடத்திற்கு மேல் உரையாற்றினார். பொது மக்கள் உற்சாகமாக உரையை கேட்டனர். தலைவரின் உரைக் கேட்டு கலியபெருமாள் (அப்பகுதி) மருத்துவமனை உரிமையாளர் தானாகவே முன் வந்து மின்சார இணைப்பு கொடுத்தார். இறுதியாக சீர்காழி பெரியார் செல்வம் கலைக்குழுவினரின் ‘வந்து பாருங்கள் தெரியும்’ வீதி நாடகம் நடைபெற்றது. நாடகம் மக்களை சிரிக்கவும் , சிந்திக்கவும் வைத்தது. இறுதியாக நகர தலைவர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ப.வ. பெரியார் செல்வம் நன்றி கூறினார்.பெரியாரியல் பிரச்சாரப் பயணம் சென்ற கிராமங்களில் எல்லாம் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழி நெடுக தோழர்களின் கொள்கை முழக்கம் கேட்டு புதிதாக தோழர்கள் கழகத்தில் இணைந்தனர். தமிழர்களே ஏன் பெரியார் தி.க.வில் இணைய nண்டும் என்ற செய்தி அச்சிடப் பெற்ற துண்டறிக்கை பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டது. இரவு உணவு பஷருதீன் ஏற்பாடு செய்து இருந்தார். விடுதலை சிறுத்தை தோழர்களும் கலந்து கொண்டனர்.

பயணக் குழுவில் சென்றவர்கள் : சீர்காழி - பெரியார் செல்வம், ரகுநாத், அருண், இன்பசேகரன், ரமேசு, சந்தோசு, கான்ரமேடு - பண்பரசன், தேவேந்திரன். தென்னல்குடி - விஜயகுமார், ராமமூர்த்தி, திருவாலி ரவி, திருநீலகண்டம் பாக்கிராசு, கொப்பியம் கிருஷ்ணராஜ், மயிலாடுதுறை இளையராஜா, சங்கர்.

சாதி ஒழிப்பு வீரர் கே.பி.எஸ். மணி நினைவு நாள்

16.3.2008 காலை 10 மணியளவில் சீர்காழியில் சாதி ஒழிப்பு வீரர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எ°. மணி அவர்கள் நினைவிடத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தோழர் அன்பு ராசப்பா கருத்துரையை தொடர்ந்து கழகத் தலைவர் கொளத் தூர் மணி சிறப்புரையாற்றினார். எ°.சி./எ°.டி. அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஏ. ராமலிங்கம் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சி யில் கே.பி.எ°. மணியின் மகன் எம். கனிவண்ணன், மாவட்டத் தலைவர் பரசுராமன், எ°.சி./எ°.டி. சங்க தோழர்கள் மயிலை முத்துசாமி மற்றும் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு : பெரியார் செல்வன்

சந்திப் பிழை போல இவர்கள் - சந்ததிப் பிழை-மேட்டூர் ஜஸ்டின் ராஜ்

-13.3.08 இதழ்த் தொடர்ச்சிபெண் தன்மைக்கு, ஈஸ்ட்ரோஜென் அதிக அளவிலும், ஆண்ட்ரோஜென் மிகக் குறைந்த அளவிலும் சுரப்பதே காரணம். அதன் காரணமாகவே பெண்ணிடம், குறைந்த அளவில் மட்டுமே ஆண் தன்மை காணப்படும்.ஆண் தன்மைக்கு, ஆண்ட்ரோஜென் அதிக அளவிலும், ஈ°ட்ரோஜென் மிகக் குறைந்த அளவிலும் சுரப்பதே காரணம். எனவே தான், ஆணிடம் குறைந்த அளவில் பெண் தன்மை காணப்படும். உடலியல் பண்புகளின் அடிப்பi டயில், முற்றிலும் பெண் தன்மையுடைய பெண்ணும் கிடையாது; முற்றிலும் ஆண் தன்மையுடைய ஆணும் கிடையாது.ஆனால், அரவாணி என்பவருக்கு ஆண்ட்ரோஜென், ஈ°ட்ரோஜென் ஆகிய இரண்டும் ஏறத்தாழ சம அளவில் சுரப்பதால் தான், அரவாணி என்பவர் ஆண், பெண் ஆகிய இருவரின் சரிவிகிதக் கலப்பாகத் தெரிகிறார். மேலும், அரவாணியிலும் ஆண் அரவாணி, பெண் அரவாணி என்ற கிளைகள் உண்டு. அரவாணி உடலில் ஏறத்தாழ சரிவிகிதத்தில் சுரக்கும் இரு ஹார்மோன்களிலும், எது சற்று அதிகமாக சுரக்கிறதோ அதுவே அரவாணி யின் ஆண் அல்லது பெண் தன்மையை நிர்ணயிக் கிறது.எனவே, உடலில் இயற்கையாகச் சுரக்கும் ஹார்மோன்களின் விகித மாறுபாட்டால்தான் அரவாணி எனப்படுவோர் குறையுள்ளவராக கருதப்படுகிறார். இது இயற்கையாக ஏற்படும் ஊனம் என்பதைத் தாண்டி வேறு எதுவுமே இல்லை. ‘ஊனமுற்றோர்’ என்போரைப் பற்றிய நமது தவறான கடந்தகாலப் பார்வை முற்றிலும் அகற்றப்பட்டு, அவர்களை சமமாக மதிக்கின்ற மிகச் சரியான நோக்கு நமக்கு ஏற்பட்டிருக்கிது. இதே அணுகுமுறையை அரவாணி மீதும் நாம் திருப்ப வேண்டும்.ஊனமுற்றோர் என்ற சொல்கூட தற்போது மாற்றப்பட்டு, ‘உடல் ரீதியான சவாலை எதிர்கொள்பவர்’ (ஞாலளiஉயடடல உhயடடநபேநன) என்ற மிகச் சரியான சொல் பயன்படுத்தப்படுகிறது. அதுபோலவே, ஒரு காலத்தில் ‘அலி’ என்று மிக இழிவான பொருளில் பயன்படுத்தப்பட்டது மறைந்து, தற்போது அரவாணி என்றும், திருமங்கை என்றும் விளிக்கப்படுகிறது. வெறும் சொல் மாற்றம் மட்டும் போதாது. உளவியல் ரீதியான நாம் அவர்களை மதிக்க வேண்டும்.குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட துணை புரிபவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் காவல் துறையினர், அரவாணிகள் மீது பொய்வழக்கு புனைவதில் இந்தியத் துணைக் கண்டம் முழுக்க ஒரே மாதிரியாகவே நடந்து கொள்கிறார்கள். அரவாணிகளுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை - இவை போன்ற எவ்வளவோ இல்லைகள் தாம் பரிசாக தரப்படுகின்றன.

திரு. மு. கருணாநிதி அவர்களின் தலைமையிலான தி.மு.க. அரசு ஆளுநர் உரையில், ‘அரவாணிகளுக்கென தனி நல வாரியம்’ ஏற்படுத்துவதாக கூறியுள்ளது மிக வரவேற்கத்தக்கது. ஏளனப் பார்வை, இழிவுபடுத்துதல் கலையப்பட வேண்டும் எனவும், சமநோக்கு என்பதை மய்யமாக வைத்து இவ்வாரியம் இயக்கத் தொடங்கினால் நல்ல அணுகுமுறைக்கான தொடக்கமாக அது இருக்கும் எனவும் நாம் கருதுகிறோம்.கடைசியாக, துளி விஷப் பார்ப்பான் சோ-வுக்கு சில வரிகள்: சாதாரணமான உடலியல் தன்மைகளைக் கொண்ட ஆண், பெண் இவர்களிடமிருந்து, அரவாணி வேறுபடுவது மேற்சொன்ன இரு சுரப்பிகளின் விகித வேறுபாடுதான். அதேபோன்று, பெரும்பாலோரி டமிருந்து வேறுபடுகிற ஆண் - ஆண், பெண் - பெண் உறவுக்கும் கூட ஒரு முதன்மைக் காரணம், இதே சுரப்பிகளின் வேறுபட்ட விகிதம்தான். அரவாணிகளை இழிவுபடுத்தும் சோ, சாவர்க்கர் - கோட்சே இருவரையும் சேர்த்தே இழிவுபடுத்தியதாக நாம் எண்ணு கிறோம். ஏனெனில், ‘கோழை’ சாவர்க்கர் - ‘அயோக்கியன்’ கோட்சே ஆகியோருக்கு இடையில் ஆண் - ஆண் உறவு இருந்ததாக நிறைய செய்திகள் வந்து விட்டன.

நாம் இவர்கள் இருவரையும் எதிர்க்க எதிர் கருத்துத் தளம் என்ற ஒன்றை மட்டுமே கையாள்கிறோம்.(இது எந்த உடற்கூறு இயல் மருத்துவரி டமும் ஆலோசனைப் பெற்று எழுதப்பட்டதல்ல; படித்த தகவல்களை வைத்தே எழுதப்பட்டது. எனவே, சிறு பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு.)

தில்லியில் மானப் பேரணி- தமிழேந்தி -

குலைநடுங்க வைத்த தில்லிக் குளிரையேகுலைநடுங்க வைத்த கொள்கைப் பேரணிமலைப்போன்ற துன்பில் மடிகின்ற இனத்திற்குமலையரணாய் வாய்த்த மானப் பேரணிசரியான நேரத்தில் சரியான இடத்தில்சாதனை படைத்த தன்மானப் பேரணிபெரியார் திராவிடர் கழக வரலாற்றில்பெருமையுறத் தனது பெயர்பொறித்த பேரணிகழகக் கண்மணிகள், காளையர்கள், பெண்கள்,மழலைப்பட் டாளம்என அணிவகுத்த பேரணி‘காந்திதேசம் கொடுக்குது புத்ததேசம் கொல்லுது’ஏந்திய கொடியோடு இடியென முழங்கிநடந்தவரால் நடுங்கியது நரிகளின் செங்கோட்டைஉடைந்தே நொறுங்கியது உலுத்தர்களின் மனக்கோட்டை“எங்கள் இனத்தைக் கொன்று புதைப்பதற்குஇங்கிருந் தே,கருவி ஏற்றுமதி யாவதா?சிங்களக் கேடரின் செயலுக்குப் பார்ப்பனத்தில்லிக் கேடரின் பச்சைக் கொடியா?இந்தியத் தேசிய இனங்களை ஒடுக்கும்இந்தி வல்லாதிக்கப் பார்ப்பனக் கழுகுஅங்கேபோய் தனது ஆட்டத்தைக் காட்டுவதா?அத்துமீறி யே,தனது மூக்கை நீட்டுவதா?ஒப்போம் ஒப்போம் என்றே உறுமியது அங்கேஒப்பற்ற பெரியார் திராவிடர் கழகம்!தமிழீழ விடுதலையின் தாகத் தவிப்பைத்தமிழ்மண்ணைத் தாண்டித் தலைநகர் தில்லியிலும்பற்றவைத்து வந்துள்ள பட்டாளத் தோழர்களைபோற்றுதற் குரிய பெரியார் தொண்டர்களைஅஞ்சாத மறவர்களின் ஆற்றல்மிகு பணியைநெஞ்சாரப் போற்றி மனம்நிறைய வாழ்த்துகிறோம்!கெடுதலைச் சிங்களர் கீழ்மைகள் தோற்கும்விடுதலைப் புலிகளின் வீரம் வெல்லும்ஒற்றுமையாய் நம்குரலும் உரத்து முழக்கவேற்றமைகள் களைந்து வெளிப்படுங்கள் தோழர்களே!

வேழவேந்தன் இல்லத் திறப்பு

கழக ஆதரவாளர் வேழ வேந்தன் சென்னை யில் புதிதாக கட்டியுள்ள மாசிலாமணி-கண்ணம் மாள் இல்லத்தை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் 13.4.2008 அன்று திறந்து வைத்தார். தோழர்கள் அன்பரசன், உமாபதி, தபசி குமரன், அன்பு சீலன், அன்பு தனசேகரன் உட்பட பலரும் பங்கேற்ற னர். கழக ஏட்டுக்கு ரூ.1000 நன்கொடை வழங்கி னார்கள். நன்றி (ஆர்.)

சென்னையில் தொடர் பிரச்சாரம்

சென்னையில் மார்ச் 24 முதல் 29 வரை கழகத்தின் தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் நடக்கின்றன. சிற்பிராசன் ‘மந்திரமா, தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.சென்னை மாவட்டக் கழகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.‘ஆயுதம் வழங்காதே’ ஆர்ப்பாட்டத்துக்கு அரசு தடை - கைது!இந்தியா - இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதை எதிர்த்து, மார்ச் 22, சென்னையில் பழ. நெடுமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்ற 300-க்கும் அதிகமான தோழர்கள் கைது செய்யப்பட்டனர். ஈழ விடுதலை ஆதரவு ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், கழக சார்பில் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், கேசவன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். தோழர் மணியரசன் (த.தே.பொ.க. பொதுச்செயலாளர்), தியாகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கைது செய்யப்பட்டு, அனைவரும் இரவு 7 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

‘தினமணி’க்கு பதிலடி-3- விடுதலை இராசேந்திரன்

இந்து மக்கள் கட்சி என்ற அமைப்பின் தலைவர் அர்ஜுன் சம்பத் பெயரில் (இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்) ‘தினமணி’ நாளேட்டில் ஒரு கட்டுரை வெளி வந்திருக் கிறது. கட்டுரையின் தலைப்பு ‘ஆன்மீகத்துக்கு விடப்பட்ட சவால்!’: சென்ற இதழ் தொடர்ச்சி-• தில்லை தீட்சதர்களுக்கு - நடராசன் கோயில் பாரம்பர்ய உரிமை படைத்தது என்றும், அவர்களுக்கு அரசு உத்தரவு போட முடியாது என்றும் கூறுகிறது, கட்டுரை!மக்களாட்சி அமைப்பில் அரசு கட்டுப் பாட்டிலிருந்து முழுமையாக விலக்குப் பெற்ற எந்த நிறுவனமும் இருக்கவே முடியாது. குடும்பத்துக்குள்ளேயே சட்ட மீறல் நடந்தால், காவல்துறை தலையிட்டு வழக்கு தொடர உரிமை இருக்கும் போது பழம் பெருமை வாய்ந்த கோயில் முழுமையாக அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியுமா? நடராசன் கோயிலில் திருட்டுப் போய்விட்டது என்றால், காவல்துறைக்கு புகார் தர மாட்டார்களா? கோயில் விழாவுக்கு போலீ° பாதுகாப்பு வேண்டாமா?

தமிழ்நாட்டில் - எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்தபோது கோயில் சொத்துகளைப் பங்கு போட்டுக் கொள்வதில் தீட்சதர்கள் இரண்டு அணியாகப் பிரிந்து கோயிலுக்குள் பயங்கர மாக மோதிக் கொண்டார்கள். கோயில் நகைகளை திருடிக் கொண்டு போய் விட்டதாக, ஒரு தீட்சதர் அணி, மற்றொரு அணி மீது மாறி மாறி காவல் நிலையத் திற்குப் போய்த் தான் புகார் தந்தது. தமிழகம் முழுதும் சிரிப்பாய் சிரித்த கதை இவை. அப்போது அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன், தில்லைக் கோயிலுக்கு தனி அதிகாரி ஒருவரை நியமித்து, கோயிலை அரசே எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். உடனே தீட்சதப் பார்ப்பனர்கள் உயர் நீதிமன்றம் போய் தடை வாங்கிவிட்டனர்.அரசு தலையிடவே முடியாது என்று கட்டுரை எழுதக் கிளம்பியுள்ள “ஆன்மீகங் களை”ப் பார்த்து நாம் கேட்க விரும்புகிறோம்;

அரசே தலையிட முடியாது என்று கூறுகிற தீட்சதர்கள், ஏன், நீதிமன்றத்துக்கு ஓட வேண்டும்? காவல்துறையில் புகார் தர வேண்டும்? நீதிமன்றம் விதித்த தடையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்? தில்லை நடராசனிடம் முறையிட்டு விட்டு, ஒதுங்கிக் கொள்ள வேண்டியது தானே! கோயில் நகைகளையும், பொருட்களையும் திருடுவதும், பங்கு போட்டுக் கொள்வதில் ‘கும்மாங்குத்து குஸ்தி’ போடுவதுதான் - தெய்வீகத் திருப்பணியா?கோயில் வருமானத்தைப் பங்கு போடு வதில் ஏற்பட்ட தகராறில் மூர்த்தி என்ற தீட்சதப் பார்ப்பனரை வேறு சில தீட்சதப் பார்ப்பனர்கள் சேர்ந்து கொண்டு கோயில் கல்தூணிலேயே மண்டையை மோதி, “மோட்சத்துக்கு” அனுப்பினார்கள். ஆன்மீகத்துக்கு சவால் விடுவது யார்? அர்ஜுன் சம்பத்துகள் பதில் சொல் வார்களா? (தொடரும்)

0 comments: