அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாதது ஏன்?

மதவன்முறை சக்திகள் அதிர்ச்சி

நாடு முழுதும் மதக்கலவரங்களைத் தூண்டி விட்டு வன்முறைகளை நடத்தி வரும் சங்பரிவார்களின் அரசியல் முகமான பா.ஜ.க.வின் மாநில பொதுக் குழு சேலத்தில் கூடியபோது மதவெறியை எதிர்க்கும் மனிதநேய உணர்வாளர்கள் கடும் எதிர்ப்பையும், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். பெரியார் திராவிடர் கழகம், சுற்றுச்சூழல், மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்த 250 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

அண்மைக்காலமாக நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, பா.ஜ.க. சங்பரிவாரங்கள், மதக் கலவரங்களைத் திட்டமிட்டு உருவாக்கி வரு கிறார்கள். மதக் கலவரங்களை உருவாக்கி படுகொலை களை நடத்தி, மத அடிப்படையில் வாக்காளர்களை கூறு போடுவதே இவர்களின் நோக்கம். தமிழ் நாட்டிலும் பெரியார் கருத்துப் பரப்பும் கூட்டங்களில் கலவரம் விளைவித்து, அதற்கு ‘இந்துக்களின் தன்னெழுச்சி’ என்று பார்ப்பனர்கள் இல.கணேசன், ராம.கோபாலன் போன்றோர், அறிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், சங். பரிவார்களின் அரசியல் அமைப்பான பா.ஜ.க. சேலத்தில் மாநில பொதுக் குழுவை கடந்த 27 ஆம் தேதி கூட்டியது. பா.ஜ.க.வின் - அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், இதில் பங்கேற்க வருகை தந்தார். அமைதிப் பூங்காவான தமிழகத்தை, மதவெறிக் களமாக மாற்றிட திட்டமிட்டு வன்முறை களை நடத்தி வரும், பா.ஜ.க.வின் செயற்குழு தமிழ்நாட்டில் சேலத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் நடத்திடக் கூடாது என்று, எதிர்ப்பு தெரிவிக்க, மதச்சார்பற்ற மதவெறிக் கலவரங்களை எதிர்க்கும் அமைப்புகள் முடிவு செய்தன. பெரியார் திராவிடர் கழகம், ‘சேலமே குரல் கொடு’, குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழ் தேசிய இயக்கம், தமிழக இளைஞர் இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் முதல் கட்டமாக சேலத்தில் 23 ஆம் தேதி பத்திரிகை யாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி யில், “சங்பரிவாரின் அரசியல் முகமான பா.ஜ.க.வின் மாநில செயற்குழு சேலத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எந்த இடத்தி லும் நடத்தவிட மாட்டோம்; அமைதிப் பூங்காவான தமிழகத்தை வன்முறைக் களமாக்கிடும், எந்த சிறு நிகழ்வும், தமிழகத்தில் நடக்கக் கூடாது என்று அமைதி விரும்பிகளாகிய நாங்கள் அறிவிக்கிறோம்; பொதுக்குழு நடத்தப்படுமானால் நேரடி நடவடிக்கை யில் இறங்குவோம்” என்று அறிவித்தார்.

அடுத்த நாளே - ‘தமிழ்நாட்டை வன்முறைக் காடாக மாற்ற விரும்பும் பா.ஜ.க.வின் பொதுக் குழுவை அனுமதிக்காதே’ என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஏராளம் ஒட்டப்பட்டன. பத்திரிகை யாளர்கள் சுவரொட்டிகளை படம் பிடித்து, பத்திரிகைகளில் வெளியிடவே, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் செய்தி வேகமாகப் பரவியது. அதிர்ச்சியடைந்த மதவெறி சக்திகள் - கழகத்தின் சுவரொட்டிகள் மீது பா.ஜ.க. பொதுக்குழு சுவரொட்டிகளை ஒட்டியதோடு, கழக சுவரொட்டிகளை கிழிக்கத் தொடங்கினர். கழகத் தோழர்கள் சுவரொட்டி கிழிக்கப்பட்ட பகுதிகளில் புதிதாக சுவரொட்டிகளை அடித்து, ஒட்டி, பதிலடி தந்தனர். சுற்றுச்சூழல்களை நாசப்படுத்தி, மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வரும் ‘கெம்பிளாஸ்ட்’ நிறுவனத்தை எதிர்த்துப் போராடி வரும் ‘கோனூர் விவசாயிகள் சங்கம்’ மக்களின் வாழ்வுரிமையை பறித்து, நிலங்களை பெரும் தொழில் நிறுவனங் களுக்கு ‘தாரை’ வார்ப்பதை எதிர்த்துப் போராடி வரும் ‘கஞ்சமலை பாதுகாப்புக் குழு’வினரும், மனித உரிமைக்கும், சுற்றுச் சூழலுக்கும் எதிராக செயல்படும் மதவெறி சக்திகளை எதிர்த்து இந்தப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டனர்.

இயற்கை வளங்களை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதை எதிர்த்த காரணத்தால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி, மக்களுக்கு சேவை செய்து வந்த மருத்துவர் விநாயக்சென் அவர்களை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. வங்காளியான விநாயக்சென் வேலூர் மருத்துவக் கல்லூரியில் படித்து - சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களிடம் மருத்துவப் பணியாற்றி வந்தவர். மனித உரிமைப் போராளி; மனித உரிமைக் கழகத்தின் அகில இந்திய துணைத் தலைவர்; மருத்துவர் விநாயக்சென்னை கைது செய்த பா.ஜ.க. அரசைக் கண்டித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கத்தோடும், ஒரிசா, கருநாடகம், தமிழ்நாட்டில் நடக்கும் மதவெறி வன்முறைகளைக் கண்டித்தும், பா.ஜ.க. பொதுக் குழு நடக்கும் மண்டபத்தின் முன், கறுப்புக்கொடிகளுடன் திரளுவது என முடிவு செய்யப்பட்டது.

‘மதத்தின் பெயரால் வன்முறைகளை அரங் கேற்றாதே’; ‘மருத்துவர் விநாயக்சென்னை விடுதலை செய்’; ‘அமைதியும் நல்லிணக்கமும் மலரட்டும்’ என்ற வாசகங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப் பட்டு, மார்பிலும், முதுகிலும் தொங்கவிட்டு, தோழர்கள் வந்த காட்சி, பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த மனித உரிமையாளர் பியுஸ் மானஷ் - இவைகளைத் தயாரித்து வழங்கினார்.

சேலம் இரும்பாலை சாலையிலுள்ள ஜகீர் ரெட்டிப்பட்டி எம்.எஸ்.வி. திருமண மண்டபத்தில், பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இரும்பாலை பிரிவு சாலை அருகே திரண்ட தோழர்கள் மண்டபத்தை நோக்கி, மதவெறி சக்திகளுக்கு எதிராக முழக்கமிட்டு, அணிஅணியாகப் புறப்பட்டனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் முதல் அணியில் வந்த 150 கழகத் தோழர்கள் மண்டபத்தை நெருங்கும் முன்பே காவல்துறை தடுத்து கைது செய்தது.

சேலம் மாவட்டக் கழகத் தலைவர் மார்ட்டின் தலைமையில் இரண்டாவது அணியில் 50 தோழர்கள் கறுப்புக் கொடியுடன் புறப்பட்டு, வேறு வழியாக மண்டபத்தை அடைந்து, மண்டப வாயிலின்அருகே கறுப்புக் கொடிகளுடன் முழக்கமிட்டபோது அதிர்ச்சியடைந்த காவல்துறை கழகத்தினரை சுற்றி வளைத்து போலீஸ் வேனில் ஏற்றியது.

மூன்றாவது அணியில் 50 தோழர்கள் மாவட்டக் கழக அமைப்பாளர் பாலன் தலைமையில் மண்டபத்தை நெருங்கி வாயிலிலே கூடியபோது காவல்துறை சுற்றி வளைத்து கைது செய்தது.

கோனூர் விவசாயிகள் சங்கத் தோழர்கள் 25 பேர் மாதேஷ் தலைமையில் - கழுத்தில், கோரிக்கைப் பதாகைகளை மாட்டிக் கொண்டு மண்டபத்தை நோக்கி வந்தபோது கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கஞ்சமலை பாதுகாப்புக் குழுவினர் தோழர் கண்ணன் தலைமையில் வந்தபோது கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 250க்கும் மேற்பட்ட தோழர்கள் திருவாக்கவுண்டனூர் சாலை யிலுள்ள பி.என்.சி.ஜி. திருமணமண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, 30 நிமிட நேரம் கழித்து, சேலம் இளம்பிள்ளையைச் சார்ந்த கழகத் தோழர் மணிமாறன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் போராட்டத்தில் பங்கேற்க வந்தனர். மணிமாறன் கருப்புச்சட்டை அணிந்திருந்தார். மண்டபத்தின் வழியாக வந்தபோது, மோட்டார் சைக்கிளை மெதுவாக நகர்த்தி, கழகத் தோழர்கள் நிற்கிறார்களா என்ற தேடிக் கொண்டிருந்த நிலையில், பா.ஜ.க.வினர் கூட்டமாக ஓடிவந்து, தனியாக சிக்கிய தோழரை தாக்கத் தொடங்கினர். ஆடிட்டர் ரமேஷ் என்ற பா.ஜ.க. பார்ப்பனர், ‘அவனைப் பிடித்து நொறுக்குங்கடா’ என்று கூச்சல் போட்டுக் கொண்டு முதலில் வெளியே ஓடிவந்தார். கும்பல் மோட்டார் சைக்கிளைப் பிடித்துத் தள்ளியது; கழகத் தோழர் மணிமாறனைத் தாக்கியபோது, காவல்துறை தோழரை மீட்டு, திருமண மண்டபத்துக்கு அனுப்பி வைத்தது. வெறி பிடித்த மதவெறி சக்திகள் - சாய்ந்து கிடந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த தோடு, வண்டியின் பெட்ரோல் டேங்க் மீது கல்லைத் தூக்கிப் போட்டு உடைத்தது. பெரியார் படம் போட்டு எழுதப்பட்டிருந்த வண்டி எண் அறிவிப்பு பலகையையும் உடைத்தது. கையில் தடி கற்களுடன் திரிந்த மதவெறி யர்கள் கழகத்தினரை கைது செய்து ஏற்றி சென்ற காவல்துறை வேன்கள் மீது கற்களை வீசினர். ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு, அந்தப் பகுதியே பரபரப்பாக காட்சியளித்தது.

திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கழகத் தோழர் களிடையே கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாதேஷ் (கோனூர் விவசாயிகள் சங்கம்), செந்தில் (குடியுரிமை பாதுகாப்பு நடுவம்), கண்ணன் (கஞ்சமலை பாதுகாப்பு இயக்கம்) ஆகியோர் பேசினர்.பா.ஜ.க. சங்பரிவார் கும்பலின் மதவெறி வன் முறைகள் மற்றும் டாக்டர் விநாயக் சென்னின் மக்கள் நலப்பணிகள் பற்றி விரிவாக பேசப்பட்டு கருத்தரங்கம் போல் நிகழ்ச்சி நடந்தது.

பா.ஜ.க. செயற்குழு மாலை 6.45 மணிக்கு முடியும் வரை, தோழர்கள் திருமண மண்டபத்திலேயே வைக்கப் பட்டு, பிறகு, விடுவிக்கப்பட்டனர். தோழர்கள் அனைவரும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை யில் சூரமங்கலம் காவல்நிலையம் வரை ஊர்வலமாகச் சென்றனர். கழகத் தோழர் தாக்கப்பட்டு, மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டது பற்றி காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. புகாரை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையைத் தந்த பிறகே கலைந்து செல்வோம் என்று கழகத்தினர் காவல்நிலைய வாயிலேயே நின்று விட்டனர். இரவு 8.30 மணி வரை காவல் நிலையத்திலே இருந்து முதல் தகவல் அறிக்கையின் பிரதியைப் பெற்ற பிறகே - தோழர்கள், கலைந்து சென்றனர். மதவெறி சக்திகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்த்து - பாராட்டுகள் குவிகின்றன

அண்மைக் காலமாக வன்முறைகளை கையில் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டில் கலவரங்களை நடத்தி வந்த சங்பரிவார் - பா.ஜ.க. வன்முறைகளுக்கு எதிராக சேலத்தில் பெரியார் திராவிடர் கழகம் - சுற்றுச் சூழல், மனித உரிமை அமைப்புகளோடு இணைந்து வெளிப்படுத்திய எதிர்ப்பு மதச்சார்பின்மையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு அமைப் பினரும் தங்கள் மகிழ்ச்சியை நேரிலும், பேசிகள் வழியாகவும் பகிர்ந்து வருகின்றனர். திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தோழர்களை விடுதலை சிறத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் உஞ்சை அரசன், அரங்க செல்லத் துரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மார்க்சிய பெரியாரிய பொது வுடைமை கட்சித் தோழர்கள், கவிஞர் தமிழேந்தி, திருச்சி கலிய பெருமாள், த.தே.பொ.க. தோழர் பிந்துசாரன் உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்து, பாராட்டுகளைத் தெரிவித்தனர். சூரமங்கலம் காவல் நிலையத்தில் தோழர்கள் திரண்டிருக்கும் செய்தி கிடைத்தவுடன், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும், உணர் வாளர்களும் தங்கள் மகிழ்ச்சி, வாழ்த்துகளைத் தெரிவித்த காட்சி உணர்ச்சிபூர்வமாக இருந்தது.
- நமது செய்தியாளர்

நளினியை விடுதலை செய்க!

17 ஆண்டுகளாக சிறையில் வாடும் நளினி, இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு தமிழக அரசு அண்ணா நூற்றாண்டு விழாவை யொட்டி வழங்கியுள்ள ‘பொது மன்னிப்பின்’ கீழ், விடுதலை செய்வதில் தமிழக அரசு முறைகேடாக செயல்பட்டிருப்பதை, உயர்நீதிமன்றம் திட்டவட்ட மாகக் கூறியிருக்கிறது. இவர்களை விடுதலை செய்யவே கூடாது என்று ஏற்கனவே முடிவெடுத் துக்கொண்டு கலைஞர் ஆட்சி செயல்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


முதலில் - இந்த வழக்கில் தம்மையும் இணைத் துக் கொள்ளுமாறு, சுப்ரமணியசாமி மனுதாக்கல் செய்தபோது, தமிழக அரசு அம்மனுவை நிராகரிக் கக் கோரியது. அதற்கான காரணம் - சுப்ரமணிய சாமி கோரிக்கையில் அரசுக்கு உடன்பாடு இல்லை என்பது அல்ல; சுப்ரமணியசாமியின் கோரிக்கையை தி.மு.க. அரசே தீவிரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது, அவர் தனியாக ஏன் மனு செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் கருத்தாக அமைந்துள்ளது.

இவர்களின் மீதான வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்ததால் - இதில் முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசு தான் என்று ‘பந்தை’ மத்திய அரசின் மைதானத்துக்குள், தள்ளிவிட, கலைஞர் ஆட்சி முயற்சித்தது. இதை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறிவிட்டது.

நளினியின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் எஸ். துரைசாமி முன் வைத்த வாதங்கள் மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். அந்த வாதங்களை நீதிபதி அப்படியே ஏற்று, தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர். நளினியின் விடுதலைகோரும் மனுவை பரிசீலிக்கக்கூடிய சிறை ஆலோசனைக் குழுவின் கூட்டம் - சிறை விதிகளின்படி நடக்கவில்லை என்று கூறிய உயர்நீதிமன்ற நீதிபதி வி.எஸ். நாகமுத்து, எட்டு குறைபாடுகளை பட்டியலிட் டுள்ளனர். இந்த சட்ட நுணுக்கங்களுக்குள் நாம் நுழைய விரும்பவில்லை. தார்மீகப்படியும் நியாயப்படியும் சில கேள்விகளை தமிழக அரசின் முன் வைக்கிறோம்.

ராஜீவ் கொலையில் தொடர்புபடுத்தப் பட்டவர்கள் என்பதற்காகவே அவர்கள் வாழ்நாள் முழுதும் சிறையிலே அடைபட்டுக் கிடக்க வேண்டும் என்று அரசு கருதுகிறதா? ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனை காலத்தை 7 ஆண்டுகளாகக் குறைத்து, மனித உரிமையில் மகத்தான சாதனை புரிந்துள்ள கலைஞர் ஆட்சி, 17 ஆண்டு காலம் சிறையில் - அதுவும் தனிமைச் சிறையில் வதைப்பட்டுள்ளவர்களை விதிகளுக்கு புறம்பான வழிகளைப் பின்பற்றி சிறையிலேயே அடைத்து வைக்க முடிவெடுப்பது நியாயம் தானா? அரசியல் கூட்டணிப் பார்வை மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளிலும் முடிவெடுப்பதற்கான அடிப்படையான காரணமாக இருக்க வேண்டுமா? இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ள சுமார் 1400 சிறைக் கைதிகளில் பெரும்பாலோர் கொலைக் குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்கள் தானே! நளினியும் - அதேபோல் ஒரு குற்றத்தில் அதுவும் நேரடியாக தொடர்பு இல்லாத ‘குற்றச் சாட்டில்’ அதுவும், தி.மு.க. எதிர்த்து வந்த கருப்புச் சட்டமான ‘தடா’ சட்டத்தின் கீழ் தண்டிக்கப் பட்டவர் தானே!

சோனியாகாந்தி அம்மையாரும், அவரது மகள் பிரியங்காவும் கருணையோடு இந்தப் பிரச் சினையை அணுக விரும்பும்போது, கலைஞர் மட்டும், இதில் தயக்கம் காட்டுவதில் நியாய மிருக்கிறதா? அதிகாரத்தை உறுதியாக - கொள்கை முடிவுகள் எடுப்பதற்குப் பயன்படுத்துவதில் கலைஞர் தயக்கம் காட்டலாமா? பார்ப்பனர்களும், பா.ஜ.க.வினரும், தங்களது அதிகாரத்தைத் துணிவோடு பயன்படுத்துகிறார்களே?

உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு - ஒரு நல்ல வாய்ப்பாகும்; இதைப் பயன்படுத்தி நளினியை விடுதலை செய்யும் முடிவை எடுப்பதே விவேக மானது; கலைஞர் செய்வாரா?

தலித் மாணவி படுகொலை காவல்துறை அலட்சியத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சத்திய மங்கலம் - கிச்சரகம்பாளையத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 14 வயது மாணவி புனிதா, பாலியல் வன்முறையில் படுகொலை செய்யப்பட்டார். ஆக°டு மாதம் 8 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. ஆனால், காவல்துறை, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தடய சோதனைகளைக்கூட மேற்கொள்ளாமல், காவல்துறை காட்டும் அலட்சியத்தைக் கண்டித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன் 29.6.2008 வெள்ளி காலை 10 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடந்தது.

ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான கூட் டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட் டத்தில் இந்த வழக்கு சி.பி.சி.அய்.டி. விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர்மணி, பாலசுந்தரி (பா.ம.க. பொதுச்செயலாளர்), வி.பி.குண சேகரன் (ஈரோடு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்), வழக்கறிஞர் பாப்பா மோகன், மக்கள் உரிமைக் கழக மாநில பொதுச் செயலாளர் பாலமுருகன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க பொதுச் செயலாளர் நிலவன் உள்ளிட்ட பல் வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர். ‘ஆம்னெஸ்டி இன்டர் நேஷனல்’ என்ற சர்வதேச பொது மன்னிப்பு சபை - இவ்வாண்டை மாணவிகள் பாதுகாப்பு ஆண்டாக அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி, தலித் மாணவியின் படு கொலையில் காவல்துறை அலட்சியத்தைக் கண்டித்தனர்.

மவுனம் சாதிக்கிறார். ‘இளவல்’ வீரமணி, இதை விரும்ப மாட்டார் என்பதற்காக, நியாயமான ஒரு செயலை அரசு முடக்குவது சரியாகுமா என்பதே நமது கேள்வி! பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க ‘தி.க.சி.’ கோரிக்கை“எழுத்தாளர் தி.க.சி. ‘தீக்கதிர்’ நாளேட்டில் எழுதி வெளிவந்த கடிதம். (26.9.2008)

சமூக அநீதியை - பொருளாதார அநீதிகளை முறியடிப்போம்” எனும் பி.சம்பத் கட்டுரை (‘தீக்கதிர்’ 17.9.08) படித்தேன்.கட்டுரை, தந்தை பெரியாரின் பேச்சுகளையும், எழுத்துகளையும் சான்று காட்டி, எழுச்சியூட்டும் வண்ணம் கச்சிதமாக எழுதப் பெற்றுள்ளது. பாராட்டுக்கள்.

கட்டுரையின் தொடக்கத்தில், “1929 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு மாநாட்டில் பெரியாரின் முழக்கம் இது” என்று குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு குறிப்பிடப்படும் கருத்துக்களும், பெரியாரின் புரட்சிகர முழக்கங்களும், எழுத்துக்களும், சிந்தனை களும், தமிழக மக்களிடையே - குறிப்பாக ஏழை - எளிய அடித்தட்டு மக்களிடையே, பெரி யாரின் 130 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில் அதிகம் பரவவில்லை என்பது கசப்பான உண்மை.
இந்த இழிநிலையை மாற்ற, பெரியாரின் படைப்புக்கள் (எழுத்துக்கள், தலையங்க உரைகள் முதலியன) நாட்டுடைமை ஆக்கப் பெற வேண்டும். இதற்கு இடதுசாரிக் கட்சிகளும், தலைவர்களும், ஏடுகளும், தமுஎச போன்ற கலை இலக்கிய அமைப்புகளும் முயற்சியெடுக்க வேண்டும்.
- தி.க.சி., நெல்லை.

சென்னை கரு.அண்ணாமலை இல்லத் திருமண விழா

தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் கரு. அண்ணாமலையின் மைத்துனியும், வேலு - அம்மா கண்ணு ஆகியோர் மகளுமான வே. பாக்கியா, குஞ்சிதபாதம்-வசந்தா ஆகியோரின் மகன் கு. சரவணன் இவர்களுடைய திருமணம் 14.9.2008 அன்று காலை 9 மணியளவில் கலைஞர் கருணாநிதி நகர் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடந்தது. கழகத் துணைத்தலைவர் ஆனூர் கோ. செகதீசன், வழக்கறிஞர் செ. துரைசாமி, வழக்கறிஞர் சு. குமாரதேவன், வழக்கறிஞர் இளங்கோவன், அன்பு தனசேகர் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினர். கழகப் பொறுப்பாளர்களுக்கு ‘பெரியார்’ படம் போட்ட சுவர் கடிகாரத்தை கரு. அண்ணாமலை திருமண வரவேற்பாக வழங்கினார். மணமக்கள் சார்பாக ‘புரட்சி பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினர்.

கழகம் எடுத்த பெரியார் விழாக்கள்!

ஈரோடு மாவட்டத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியார் 130 வது பிறந்த நாள் விழா. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் கழகக் கொடி ஏற்றப்பட்டது.
கோபி பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன் தலைமை வகித்தார். தலைமைக் கழகப் பேச்சாளர் கா.சு. வேலுச் சாமி, மாவட்ட அமைப்பாளர்கள் சதுமுகை பழனிச் சாமி, புதுரோடு சிதம்பரம், இளைஞரணி அமைப்பாளர் கருப்பண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பெருந்துறை ஒன்றியம் கூதாம்பி - வெள்ளாங் கோவில் பிரிவில் மாக்கானாங்கோம்பை பாலசுப்பிரமணி முதல் கொடியை ஏற்றி வைத்து ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.

தந்தை பெரியாரின் உருவப்படம் பெரிய அளவில் தயாரித்து, மாலைளால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப் பட்ட வேன் முன் செல்ல, பேண்டு வாத்தியங்கள், மத்தளங்கள், இசைக் கருவிகள் ஒலி முழங்கத் தொடங்கிய ஊர்வலம், 30-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் தொடர்ந்து கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்க பல்வேறு ஊர்களின் வழியாகச் செல்லத் தொடங்கியது.

சிறுவலூர் பேருந்து நிறுத்தத்தில் தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பெருந்துறை ஒன்றியச் செயலாளர் அர்ச்சுனன் இங்கு கொடியேற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து கொளப்பளூர் நகரை அடைந்தது ஊர்வலம். மூப்பன் சாலைப் பிரிவில் பெரியார் பஞ்சாலைத் தொழிலாளர் கழகத் தலைவர் து.ஜெயக்குமார், கிழக்குத் தோட்டம் பெரியார் நகரில் நேதா ஆசை, புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளி நிறுத்தத்தில் சரவணன், அருவங்கொரையில் ம. நிவாசு, குருமந்தூர் பிரிவில் சுப்பிரமணி, அம்மன் கோவில் பதியில் க. மூர்த்தி, கும்மிக்கருக்கில் செல்வராஜ் ஆகியோர் கழகக் கொடியேற்றி வைத்தனர்.


கொளப்பளூர் பேருந்து நிறுத்தக் கொடிக் கம்பத்தில் தோழியர் த. ரஞ்சிதமணி கொடியேற்றினார். கழக நகைச்சுவைப் பேச்சாளர் வேலுச்சாமி சமூகநீதிக்காக தந்தை பெரியார் ஆற்றிய தொண்டினை எளிமையாக எடுத்துக் கூறி உரை நிகழ்த்தினார்.காமராஜ் நகர் அருகில் பகுத்தறிவு நெறியாளரும், தி.மு.க. பிரமுகருமான அருள்மணி, மளிகைக் கடை கணேஷ் ஆகியோர் அன்புடன் வரவேற்று அனைவருக் கும் இனிப்புகள் வழங்கியதுடன் ஆர்வத்துடன் ஊர் வலத்திலும் பங்கு கொண்டனர். பெரியார் படத்திற்கு மலர் தூவி மாலையணிவிக்கப்பட்டது. அருகிலுள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. வேட்டைக்காரன் கோயிலில் கொடிவேரி கிளைத் தலைவர் கோவிந்தன், மொடச்சூரில் காசி பாளையம் சுப்பிரமணி, ஜோதி நகரில் சு. வேலுச்சாமி, நாய்க்கன்காட்டில் கூடக்கரை அருளானந்தம், ஜீவா பணிமனை அருகில் கோபி நகரத் தலைவர் நாகப்பன் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.

கோபி - ஈரோடு முதன்மைச் சாலையில் அமைந் துள்ள பா. வெள்ளாளபாளையம், பொலவக்காளி பாளையம் ஆகிய ஊர்களில் புதியதாக கழகக் கொடிக் கம்பங்கள், ஆசிரியர் சோமசுந்தரம், நேதா ஆகியோர் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. அருள்மணி, தி.மு.க. பிரமுகர் பெருமாள் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர். ஓய்வு பெற்ற அஞ்சலக அதிகாரி நேதாஜி முன்னிலை வகித்தார். பின்பு, தாசம்பாளையத்தில் தோழர் பழனிச்சாமி கொடியேற்றிய பின்பு கோபி நகருக்குள் ஊர்வலம் நுழைந்தது. ஒரே சீராக அழகுற நீண்ட வரிசையில் வந்த கருஞ்சட்டைப் படை ஊர்வலம், பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்தது.

கோபி கடைவீதிகள், முக்கியச் சாலைகள் வழியாக வாகன ஊர்வலம் பெரும் ஒலி முழக்கங்களுடன் வந்த போது அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் இருந்தோர் பெருமளவில் பார்த்து வியந்தனர். ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

கோபி பேருந்து நிலையத்தில் கற்பகம், மூன்று முக்கு அரசமரத்தடியில் சித்ரா தையலர், நாராயணன், வாய்க்கால் விதியில் கனகராஜ், கச்சேரி மேட்டில் பி.சிவராஜ், கரட்டடிபாளையத்தில் மாவட்ட அமைப்பாளர் ரகுநாதன், ல.கள்ளிப்பட்டிப் பிரிவில் சித்தா பழனிச்சாமி, கள்ளிப்பட்டியில் மூர்த்தி ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.

செப்டம்பர் 17 அன்று காலையில் தொடங் கிய ஊர்வலம் மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. கோபி நகரத் தலைவர் நாகப்பன் இல்லத்தில் அனைத்து தோழர்களுக்கும் சிறப்பான புலால் உணவு வழங்கப்பட்டது.
கூடக்கரை

நம்பியூர் ஒன்றியம் கூடக்கரை கிராமத்தில் பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.புதிய கழகப் பெயர்ப் பலகையை நம்பியூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.எ°.சென்னி மலை திறந்து வைத்து, கழகக் கொடியையும் ஏற்றி வைத்தார். அய்யா படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி சிறப்பித்தார்.தி.மு.க. பிரமுகர்கள் சுப்பிரமணி, தனுஷ்கோடி, பொன்னுசாமி மற்றும் கழகத் தோழர்கள் அருளானந்தம், கலைச் செல்வன், சிவராசு, சண்முகம், செல்வன், சசி, மனோஜ், முருகேசன், சேகர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

காவேரிப்பட்டினம்
செப்டம்பர் 15 ஆம் நாள் திங்கள் கிழமை பேரறிஞர் அண்ணா 100வது பிறந்த நாளையொட்டி காவேரிப் பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தின் முன்புள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு காலை 9 மணி யளவில் காவேரிப்பட்டினம் ஒன்றிய அமைப்பபாளர் பையூர் தி.க. இளையராசா தலைமையில் மாவட்ட அமைப்பாளர் ஆர்.கணணன், மாவட்ட துணை அமைப்பாளர் தி.குமார், கோ. பிரேம்குமார், நகர அமைப்பாளர் கோ. ஆனந்தன், மா. சேகர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.செப்டம்பர் 17 , பெரியாரின் 130வது பிறந்த நாளை யொட்டி, காவேரிப்பட்டணம் பேரூராட்சி அலுவலகத் தின் முன்பு பெரியார் உருவ படத்திற்கு காலை 10 மணியளவில் ஒன்றிய அமைப்பாளர் பையூர் தி.க. இளையராசா தலைமையில் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட அமைப்பாளர் ஆர். கண்ணன், மாவட்ட துணை அமைப்பாளர் தி.குமார். கோ. பிரேம்குமார், நகர அமைப்பாளர் கோ. ஆனந்தன், மனோஜ்குமார், மா. சேகர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் இளங்கோ, ம.தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ருத்ரன், மாதையன், பா.ம.க. ஒன்றிய செயலாளர் பெரியண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் நரசிம்மன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய அமைப்பாளர் சிவக்குமார் மற்றும் கழக தோழர்கள் அனைத்து கட்சி தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் பையூரிலுள்ள பெரியார் உருவ சிலைக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சீர்காழி17.9.2008 அன்று காலை 10 மணி அளவில் சீர்காழி புதிய பேருந்துநிலையம் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு நகர செயலாளர் பா. பிரபாகரன் தலைமையில் சீர்காழி ஒன்றிய துணைத் தலைவர் பொன். தேவேந் திரன் மாலை அணிவித்தார். கொள்ளிட ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் கொடியேற்றி வைத்தார். சீர்காழி ஒன்றியத் தலைவர் இரா.ச.விசயகுமார் வரவேற்புரை யாற்றினார். நகர தலைவர் சீர்காழி பெரியார் செல்வம் சிறப்புரையாற்றினார். மாணவரணி அமைப்பாளர் இன்பசேகரன், ரகுநாத், மாவட்ட துணைத்தலைவர் சோம. ராசராசன், புரட்சி கலை இலக்கிய மன்ற செய லாளர் அன்பு, ராசப்பா, வழக்கறிஞர்சோமசுந்தரம் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். கொள்ளிட ஒன்றியத் தலைவர் நந்த. ராசேந்திரன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். சீர்காழி ஒன்றிய துணை செயலாளர் இரா. மே. இராமமூர்த்தி நன்றி கூறினார்.

கொள்ளிடம் ஒன்றியம்கொள்ளிட ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் தலைமையில் நகர தலைவர் பெரியார் செல்வம் , சீர்காழி ஒன்றிய துணை செயலாளர் இரா.மே. இராமமூர்த்தி ஆகியோர் கொள்ளிட ஒன்றிய பகுதிகளில் கழக கொடி யேற்றி இனிப்புகள் வழங்கினர். கொடியேற்று விழாவில் கொள்ளிட ஒன்றிய பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை17.9.2008 அன்று பெரியார் 130வது பிறந்த நாள் விழா காலை 8.30 மணியளவில் சென்னை பட்டாளத்திலுள்ள பெரியார் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் தோழர்களுடன் சென்று மாலை அணி வித்தார். 9 மணியளவில் அண்ணா சாலை யிலுள்ள பெரியார் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் மாலை அணி வித்தனர். பின்னர் இரண்டு சக்கர வாகனம், ஆட்டோக்கள் என 100க்கும் மேற்பட்ட தோழர்களுடன் ஊர்வலமாக சேத்துப்பட்டு, தியாகராயர் நகர் ஆகிய இடங்களிலுள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து, ஆயிரம் விளக்கு, ஆல்தோட்டம் பகுதியில் தோழர்கள் லியாஸ், வேழவேந்தன் ஏற்பாடு செய்திருந்த பெரியார் கருத்துக்கள் அடங்கிய கழகப் பெயர் பலகையை திறந்து வைத்து உரையாற்றினர். பின்னர் இராயப்பேட்டையிலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். 11 மணி அளவில் இராயப் பேட்டை சைவ முத்தையா 5வது தெருவில் கழகக் களப்பணியில் உயிர் நீத்த கண்ணன். குமார் நினை வாக பெரியார் இரவு பாடசாலையை திறந்து வைத்து கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அன்பு தனசேகர் ஆகியோர் உரையாற்றினர். மாணவ மணி களுக்கு நோட்டு பென்சில், பேனா வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு கு. சபரி தலைமை தாங்க சு. பிரகாசு வரவேற்க கோ. சீனு முன்னிலை வகித்தார். ச. சர வணன் நன்றி கூறினார்.பகல் 12.30 மணியளவில் திருவல்லிக்கேணி அனுமந்தபுரம் பகுதியில் பெரியார் 130வது பிறந்த நாள் விழா அம்பேத்கர் இரவு பாட சாலை மற்றும் நூலகம் சார்பாக தோழர்கள் செல்வம், தம்பித்துரை, பாபு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பெரியார் 130வது பிறந்த நாள் கேக்கை வெட்டி உரை நிகழ்த்தினார் கழக வழக்கறிஞர் சு. குமாரதேவன். அனைவருக்கும் புலால் உணவு வழங்கப்பட்டது.

பெரியார் 130வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் 18.9.2008 வியாழன் மாலை 6.30 மணியளவில் இராயப்பேட்டை வி.எம். தெரு பெரியார் சிலை அருகில் சமர்ப்பா குமரன் குழுவினரின் இன எழுச்சிப் பாடலோடு துவங்கியது. கி. முருகன் வரவேற்க, தபசி. குமரன், கரு. அண்ணாமலை முன்னிலை வகிக்க ச. குமரன் தலைமையேற்றக் கூட்டத்தில் இயக்குனர் சீமான் சிறப்புரையாற்றினார். கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், இளைஞர் இயக்கம் டாக்டர் எழிலன், எ. கேசவன், அன்பு தனசேகர் ஆகியோர் உரையாற்றினர். சு. ஆனந்தன் நன்றி கூற கூட்டம் 10.30 மணியளவில் முடிவுற்றது. மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமையில் நிகழ்ச்சியை தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாதது ஏன்?

திரிபுவாத திம்மன்கள் - யார்? (3)

பெரியாரை பரப்புவதைவிட, திரிபுவாத திம்மன்களிடமிருந்தும் சுயநலத் துரோகி கூட்டத்திலிருந்தும் அவரைப் பாதுகாப்பதே முக்கியம்! (புத்தர் கொள்கையை திரித்தது போன்ற ஆபத்திலிருந்து) அய்யா அவர்தம் உண்மைத் தொண்டர்களின் பணி அதுதான்.”- மீ.கி.வீரமணி, ‘விடுதலை’ (30.8.2008)
மேலே எடுத்துக்காட்டிய “24 காரட் பொன் மொழிகளுக்கு” முழு உரிமை படைத்த ஒரே தலைவரான வீரமணி தான் ‘திரிபுவாத திம்மன்’ ஆக செயல்பட்டு வருகிறார் என்பதற்கு கடந்த இதழ்களில் பல்வேறு புரட்டல்களை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ எடுத்துக்காட்டியிருக்கிறது. ஆனால் ‘விடுதலை’யின் ‘அதிர்ச்சி’ எழுத்தாளர்கள் பேனாவை மூடிக் கொண்டு விட்டார்கள்.பெரியாரியலையே புரட்டிக் கொண்டிருக்கிற இவர்கள் - அவற்றை கடந்தகால வரலாறுகளில் செய்தால்கூட பலருக்கும் தெரியாது போக வாய்ப்பு உண்டு. நடப்பு நிகழ்வுகளிலேயே - இந்தப் புரட்டுகளை வெட்க மின்றி அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்; இதோ, ஒரு புரட்டு.

கலைஞர் தலைமையில் நடக்கும் தி.மு.க. ஆட்சி, அனைத்துசாதி யினரும் அர்ச்சகராகலாம் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமியற்றிய பிறகு, அதை எதிர்த்து உச்சநீதிமன்றத் தில் மீண்டும் வழக்கு தொடரப் பட்டது. என்ன காரணத்தினாலோ, தமிழக அரசு சட்டப்படியான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை. கலைஞர் மிகவும் சாதுர்யத்தோடு செயல்படுவதாக கி.வீரமணி அதை பாராட்டினார். தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெறும் பயிற்சி நிறுவனங்கள், தமிழ்நாட்டின் 6 முக்கிய கோயில்களில் ஏற்படுத்தப்பட்டு, அனைத்து சாதியினருக்கும் பயிற்சிகளும் தரப்பட்டன. பயிற்சி முடித்து வெளியே வந்த மாணவர்கள் இப்போது அர்ச்சகராக முடியவில்லை.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முடியாது என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது என்று ‘இந்து’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

“அர்ச்சகருக்கான ஓராண்டு பயிற்சியை முடித்தவர்கள், இப்போது தாங்கள் பெற்ற பயிற்சியைப் பயன்படுத்தக்கூடிய வேறு ஏதாவது மாற்று வேலைகள் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள், அர்ச்சகர் வேலை கிடைக்கும் என்று காத்திருப்பது, நீண்டு கொண்டே போகிறது. காரணம் - உச்சநீதிமன்றத்தில், வழக்கு இருப்பதால், அரசாங்கம், சாதி வேறுபாடற்ற அர்ச்சகர் நியமனத்தை நிறுத்தி வைத்துவிட்டது” என்று செய்தி வெளியிட்டுள்ளது ‘இந்து’ ஏடு.

இதை ‘விடுதலை’ நாளேடு எப்படி வெளியிட்டிருக்கிறது? “அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டதன் பலன்கள்; அரசுப் பணிக்கு முன்பே அர்ச்சகராகப் பணி புரிகிறார்கள்; ‘தி இந்து’ ஏட்டின் படப்பிடிப்பு” என்று புரட்டி செய்தி போடுகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதையோ, வழக்கின் காரணமாக - அறநிலையத் துறையின் கீழ் உள்ள ஆகமக் கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்பதை அரசு நிறுத்திவிட்டது பற்றியோ, ‘இந்து’ வெளியிட்டதை இருட்டடித்து விட்டு, ‘விடுதலை’, ‘இந்து’ ஏட்டின் செய்தியை திரித்து மொழி பெயர்க்கிறது.

ஆகமங்களுக்கு உட்படாத கிராமக் கோயில்களில், தனியார் கோயில்களில் அர்ச்சகர்களாக ஏற்கனவே பார்ப்பனரல்லாதார் இருக்கிறார்கள். பெரியார் எழுப்பிய பிரச்சினையே ‘பார்ப்பனருக்கு மட்டுமே அர்ச்சகர் உரிமை உண்டு’ என்பதை நிலைநாட்டும் ஆகமக் கோயில்களில் அதைத் தகர்த்து, அதன் மூலம் ‘கர்ப்பகிரகத்துக்குள்’ நிலைநாட்டப்பட்டுள்ள ‘சூத்திர’ இழிவுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படவேண்டும் என்பது தானே! அந்த மாற்றம் இப்போது வந்துவிட்டதா? இந்தக்கேள்விக்கு ‘இல்லை’ என்பதுதான் பதில்.உச்சநீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளாமல், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கிய அரசின் முடிவு தோல்வியில் முடிந்துவிட்டது. இது யார் தந்த ஆலோசனை? கலைஞர் எடுத்த ‘சாதுர்யமான’ முடிவு என்று, கி.வீரமணி பாராட்டியதற்கான காரணம் என்ன?

(‘31சி’ புகழ் !) வீரமணிதான் ஆலோசனை வழங்கினாரா? மீண்டும் தோல்வியில் முடிந்து விட்டதா? - இந்தக் கேள்விகள் - மக்கள் மன்றத்தில் எழத்தானே செய்யும்?

அதற்காக - மக்களை உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு குழப்பலாமா? செய்திகளையே திரித்து வெளியிடலாமா? ‘முரசொலி’ நாளேடுகூட இப்படி திரித்துப் போட்டு வெளியிட முன் வராத நிலையில் ‘விடுதலை’ ஏன், இப்படி புரட்டல் வேலை செய்கிறது?

ஏதோ, வேலை வாய்ப்புக்காக - அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது போலவும், அந்த நோக்கம் வெற்றிப் பெற்றது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி பெரியார் கொள்கையை திரிப்பது புரட்டு அல்ல! மகா புரட்டு!திரிபுவாத திம்மன்கள் பதில் கூறுவார்களா?

(புரட்டுகள் உடைப்பு தொடரும்)

ரங்கநாதபுரத்தில் கழகக் கிளை

7.9.2008 ஞாயிறு மாலை 5.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் நம்பியூரில் உள்ள ‘ரங்கநாதபுரம்’ என்ற பகுதியில் புதிய கிளை துவக்க விழா மற்றும் கொடியேற்று விழா, பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நம்பியூர் பேருந்து நிலையம் அருகில் “தமிழின உரிமைக்கு எதிரிகள் யார்?” விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

முதலாவதாக ரங்கநாதபுரத்தில் கழகக் கொடியை பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் ஏற்றி வைத்தார். அடுத்து ரங்கநாதபுரம் பிரிவில் பெயர் பலகையை திறந்து வைத்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி கழகக் கொடியையும் தோழர்களின் கரவொலி, முழக்கத்திற்கிடையே ஏற்றி வைத்தார். பின்னர் நம்பியூர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த கழகக் கொடிக் கம்பத்தில் பொதுச்செயலாளர் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.

இருசக்கர வாகனங்களின் அணி வகுப்புக்கு பின்னர் கழகத் தலைவரும், பொதுச் செயலாளரும் ஜீப்பில் வந்து ஒவ்வொரு இடங்களிலும் கொடியினை ஏற்றி வைத்தது மிகுந்த எழுச்சியுடன் இருந்தது. பொதுமக்கள் ஆங்காங்கே நின்று கொண்டு இருளையும் பாராது வேடிக்கை பாhத்தனர்.

சரியாக 6 மணிக்கு பொதுக் கூட்ட மேடையில் குமாரபாளையம் “சமர்ப்பா குமரனின்” இசை நிகழ்ச்சி துவங்கியது. பாடல்கள் உணர்ச்சிகரமாக இருந்தது. எலத்தூர் செல்வக்குமார் தலைமையில் நாத்திகசோதி, ப. முருகன், சாமிநாதன், ப. அழகிரி ஆகியோர் முன்னிலையில் “தமிழின உரிமைக்கு எதிரிகள் யார்?” விளக்கப் பொதுக்கூட்டம் துவங்கியது.

மாவட்ட துணைத் தலைவர் கா.சு.வேலுச்சாமி மிகுந்த நகைச்சுவையுடன் உரையாற்றினார். மாவட்ட செயலாளர் இராம.இளங்கோவின் உரையைத் தொடர்ந்து, கழகப் பொதுச்செயலாளர் சிறப்புரையாற்றினார். இறுதியாக கழகத் தலைவர் நீண்ட நேரம் மிக நேர்த்தியாக தமிழினத்திற்கு எதிரிகள் ‘பார்ப்பனர்களே’! என்பதை பல்வேறு ஆதாரங்களை, சான்றுகளைக் கூறி உரை நிகழ்த்தினார். தலைவர் உரையாற்றும்போது மேடையில் நம்பியூர் பகுதியைச் சார்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் மாரியப்பன், தங்கவேலு ஆகியோர் மாலை அணிவித்து தலைவருக்கு தங்கள் அன்பை, ஆதரவை வெளிப்படுத்தினர்.

இறுதியாக ரங்கநாதபுரம் செயலாளர் இரமேசு நன்றி கூறினார். கூட்டத்தில் மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி நின்று பேச்சைக் கேட்டனர். தோழர்கள் செல்வக் குமார், அழகிரி, ரமேசு, முருகன், கூடக்கரை அருளானந்தம், கலைச்செல்வன், சாமிநாதன் ஆகியோர் மிகுந்த ஆர்வத்துடன் கடுமையாகப் பணியாற்றி, கொடித் தோரணங்கள், சுவரெழுத்து, சுவரொட்டி என பல்வேறு வகையில் விளம்பரம் நன்கு செய்திருந்தனர். நம்பியூர் முழுவதும் விழாக் கோலம் பூண்டிருந்தது.

1 comments:

Mohan Balki - YoZenMind Counseling Psychologist, Chennai, India. said...

My hearty wishes to continue your mission for the Tamils and particularly for the upliftment of Non-brahmins.

Just my humble view is, the page of your blog seems unreadable as the background is in black and the forefront letter are in white.
(Though it is to represent your party colour...given by Thanthai Periyar EVR for the deprived Tamil Society)
Please make it readable easily, as the reading in PC monitor is not an easy joke,like we do in a book.
Thanks and Regards,
MBK/yozen mind